பக்கம்:எழிலோவியம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

3

வீட்டிற்குத் தலைவி உன்னை
விரும்பினாள்; கொண்டு போனாள்!
வீட்டிலே தனித்த மங்கை
உன்மீது குளிர்ந்த கண்கள்
காட்டினாள்; உயிர்போல் உன்னைக்
கருதினாள்; மாடஞ் சேர்த்தாள்;
ஊட்டினாள் உணவை; நன்னீர்
உண்பித்தாள்; வளர்ந்தாய் நீயே!

4


தொட்டியில் நட்ட முல்லை
துளிர்த்தது! நாட்கள் செல்ல
எட்டியே இலைகள் விட்டுத்
தழைத்தது! பற்கள் போன்ற
மொட்டுக்கள் ஒவ்வொன் றாக
முதிர்ந்தன! ஒவ்வோர் நாளும்
கொட்டிற்றுச் சிரிப்பை முல்லை
பூந்தொட்டிக் கொழுந னுக்கே !

5


ருண்டது தொட்டி ஓர்நாள்
மாடுராய்ந் தகன்ற தாலே !
பருவுடல் எங்கும் ஓட்டை!
பார்வைக்குத் தொட்டி முன்போல்
இருந்தது! வளர்ந்த முல்லை
இலையெலாம் வாட, வீட்டார்
மருந்தாகும் எருவும் நீரும்
மலர்த்தொட்டிக் கூட்டி னாரே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/51&oldid=1299291" இலிருந்து மீள்விக்கப்பட்டது