இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நூல்
1
நிலம்வளி தீநீர் வானம்
நிலவிய உலகில் உள்ள
பலபொருள் பொருளின் ஆக்கம்
பொறியினால் பகுத்தா ராய்ந்து
விலக்குதல் விலக்கி மக்கள்
விலக்காத மேன்மை ஒன்றே
உலகினுக் களித்த ஆன்றோர்
உள்ளமே உயர்நூ லாகும் !
2
கருத்தினில் பிறந்து, மக்கள்
காதினில் தவழ்ந்து, தாளிக்
குருத்தினில் வளர்ந்து, தோலில்,
குன்றினில் துள்ளி யாடி
அருங்கலை அள்ளி அள்ளி
அளிக்கின்ற வள்ள லாகி
விருந்துாட்டு கின்றாய் இன்று
வெள்ளைத்தாள் கோட்டைக் குள்ளே !