பக்கம்:எழிலோவியம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

3

லை,கடல், மருதம், முல்லை,
பாலையும் மாறி மாறி
நிலைகுலைந் திடினும், மக்கள்
நெறி,செயல் வேறா னாலும்,
தலைமுறை கடந்தைந் தாறு
தலைமுறை சென்றிட் டாலும்
கலைமுதிர் ஆன்றோர் ஆழ்ந்த
கருத்துநூல் அழிவ துண்டோ ?

4


நாட்டினை, மக்கள் நெஞ்சின்
நலிவினை, அடிமை வாழ்வைத்
தீட்டிடும்; அறிவைத் தீட்டும்;
தேன்சுவைக் காதல், வீரம்
ஊட்டிடும்; நாட்டைக் காக்கும்;
ஒண்பொருள் பெருக்கும்; எந்த
ஈட்டியும் அரசும் நூலை
எதிர்த்துப்பின் மீண்ட தில்லை !

5


றியாத உலகிற் கெல்லாம்
அழைத்துப்போய், அறிய வொண்ணா
நெறியெலாம் விளக்கி, மக்கள்
நினைப்பினில் புதுமை தேக்கி,
குறிக்கோளில் வாழ்வில் ஏழ்மைக்
கொடுமையில் ஊக்கி, மேன்மை
நெறிசெலத் தூண்டும் தோழன்
நன்னூலாம் ! நீடு வாழ்க !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/55&oldid=1299273" இலிருந்து மீள்விக்கப்பட்டது