இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வேண்டும்போ தருகில் வந்து,
வேண்டாத போத டங்கி,
யாண்டுமே மக்கள் வாழ
யாவையும் விளக்கி, உள்ளம்
துாண்டியே அவர்கள் வாழ்வின்
தூய்மையே இன்ப மாகப்
பூண்டிட்ட மேலோர் செல்வம்
பொன்னூலாம்¡ வாழ்க தம்பி !
அடித்தறி வூட்டா தென்றும்,
அன்புடன் பரிந்து வந்து
மடிபிடித் திழுத்து வேண்டா
மனங்கண்டும் பொறுத்தி ருந்து
கொடுவெனக் கேட்கும் போது
முனியாது குளிர்மை காட்டி
எடுவெனக் கொடுக்கும் ஆசான்
நூல்களாம்! இவைபோல் உண்டோ?
வாயிலா திருந்தும் இன்பம்
வற்றாது பேசிப் பேசித்
தாயினைப் போல மக்கள்
தந்நலம் ஒன்றே பேணி
வேயிளம் கன்னிப் பெண்ணாள்
மென்னகை காட்டி, என்றும்
ஆயுணர் வளிக்கும் நூலை
அடையாதார் அடையார் இன்பம்¡