இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
56
9
அடைத்தனர் சிறையில்; சோர்ந்து
விழும்வரை அடித்துப் பார்த்தார்;
கொடுத்தனர் நஞ்சை; ஊரில்
குடிசெய விட்டா ரில்லை;
தடுத்தனர்; தீயில் இட்டார்;
தண்டனை வெளியிட் டோர்க்குக்
கொடுத்தனர்; எனினும் நூலின்
கொள்கைகள் அழிந்த தில்லை !
10
வீட்டினைத் துலக்கும்; நெஞ்சில்
வீரத்தை வளர்க்கும்; மாற்றார்
கோட்டையைத் துாள்தூ ளாக்கும்;
கொலைஞரை நல்லோர் ஆக்கும்;
நாட்டினை, நாட்டில் வாழும்
மக்களை, அரசைத் தூண்டி
ஆட்டினும் ஆட்டும்; இன்பம்
அளித்தலும் அளிக்கும் நூலே !
--------