பக்கம்:எழில் உதயம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் உதயம் 17

யின் உதயத்தால் அன்பர்களின் இதயதாமரைகள் மலர் கின்றன. மக்கள் செஞ்சுடரோன் வந்தானென்று துயில் நீங்கி முயற்சியில் ஈடுபடுகிருர்கள் : அம்பிகையின் சமுதாய சோபையில் கலந்தவர்கள் தம்முடைய தாமத குணத்தி னின்றும் நீங்கி விழித்துக்கொண்டு தம்முடைய தொழி லாகிய உபாசனையைச் செய்கிருர்கள். .

இப்படிப் பல படியாக விரிக்குமாறு அந்த உவமை அமைந்துவிடுகிறது. ஆலுைம் இங்கே முக்கியமாக அம்பிகையின் திருமேனி லாவண்யத்துக்கு உவமையாக நிற்கிருன் உதயசூரியன்.

உதய சூரியனுகிய உவமை பொருத்தந்தான். அம்பிகையின் உயர்வுக்கும் சோதி வடிவுக்கும் அது ஏற்ற தாக அமைந்துவிட்டது. ஆனல் ? - o -

இங்கே ஒர் எண்ணம் குறுக்கிடுகிறது. சூரியன் வானத்தில் உலவுகிருன். நாம் வா என்ருல் வருவதில்லை; போ என்ருல் போவதில்லை நம்முடைய விருப் பத்தையோ வெறுப்பையோ எண்ணி அவன் ஒன்றும் செய்வதில்லை. அம்பிகையோ அத்தகையவள் அல்லள். வானவருக்கும் ஏனையவருக்கும் எட்டாதவளாக இருந் தாலும் அடியவர்களுக்கு எப்போதும் அணிமையில் இருக் கிருள். அவள் தன் உருவத்தைக் காட்டுவது அடியவர் களின் வணக்கத்தைப் பெறுவத்ற்காகவே. அவளை உபாச கர்கள் எப்போதும் தலையால் பணிகிரு.ர்கள். மங்கைமார் தம் உச்சியிலே திலகத்தைத் தாங்குகிருர்களே, அதுபோல இந்தச் செம்மையுருவமைந்த பிராட்டியை அன்பர்கள் முடியணி யாக்குகிருர்கள். ஆகவே வணங்குவதற்குரிய வளாக, அடியாரின் தலைக்கு அணியாக, அவர்களுக்கு அண் ணியவளாக, செந்நிறம் பூத்தவளாக இருக்கும் அவளுக்கு உச்சியிலே அணியும் திலகத்தை உவமை சொல்லலாமே;

எழில்-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/25&oldid=546182" இலிருந்து மீள்விக்கப்பட்டது