பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் - (21) ஹோமில் சேர்ந்தவர், ஒய்வு தேவை என்று டாக்டர் எவ்வளவோ வற்புறுத்தியும், எனக்கு உடம்புக்கு ஒன்றுமில்லை என்று வீடு திரும்பியிருப்பாரா? இந்தப் பிடிவாதமே அவருடைய முடிவைத்துரிதப்படுத்தி விட்டது. கல்கியில் பிரசுரமான'வலம்புரிச்சங்கு என்ற பரிசுக் கதை மூலமாக எழுத்துலகில் அடியெடுத்து வைத்த நா.பா. இலக்கியத் தரத்தில் பிடிவாதம் காட்டிய அபூர்வமான வலம்புரிச்சங்காகவே கடைசி வரை திகழ்ந்தார். + (திரு.நா.பா. காலமான சமயம் கல்கி 27.12.1987 இதழில் பிரசுரமான கட்டுரை)