தூரிப் பாட்டு
73
மண்மீது பாணமது மாரைப் பிளக்குதங்கே;
அரஹரா முருகையா,
தம்பியுட கைப்பாணங்கள் தலையை அறுக்குதங்கே,
அரஹரா முருகையா,
தலையில் எழுதினவன் தப்பாமே எழுதுவானோ?
அரஹரா முருகையா,
மண்டையிலே எழுதினவன் மறைச்சு எழுதுவானோ!
அரஹரா முருகையா,
எழுதினவர் கண்களிலே எழுத்தாணிக் கூருமின்னால்;
அரஹரா முருகையா,
பண்ணினவன் பாவமெல்லாம் பாம்பாப் புரளுறனோ;
அரஹரா முருகையா,
பாம்படிச்சு மேல்போட்டாரே, பழிகாரப் பட்டணத்தில்;
அரஹரா முருகையா,
கொடி புடுங்கி மேல்போட்டாரோ, கொலைகாரப் பட்டணத்தில்
அரஹரா முருகையா,
அல்லிக் கொடி புடுங்கி அண்ணாக் கயிறுதிரிச்சார்;
அரஹரா முருகையா,
வர்ணவர்ணக் காடுகளாம், வழிவழியாம் சாலைகளாம்;
அரஹரா முருகையா,
பின்னமரத் தோப்புகளாம், இளந்தோப்பாம், சாலைகளாம்;
அரஹரா முருகையா,
சாலடா உன்வயிறு, சாதிகெட்ட பண்டாரமே,
அரிஹரா முருகையா,
ஏரியடா உன்வயிறு, ஏதும்கெட்ட பண்டாரமே,
அரஹரா முருகையா,
கல்லையா உன்மனசு கரையலையா எள்ளளவும்?
அரஹரா முருகையா,
இரும்பையா உன்மனசு; இரங்கலையா எள்ளளவும்?
அரஹரா முருகையா,
எள்ளுக் கலந்திருக்கும்; இருகலமும் பச்சரிசி,
அரஹரா முருகையா,