உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

தறிப் பாட்டு

பள்ளத்தில் வெள்ளமது துள்ளியே போகுது;
       பறியடா, தறியடா, மிறியடா, வெறியா!
பிள்ளைவெள் ளாடதே பிசினிபோல் ஆக்கு;
       பெருச்சாளி சண்டைக்கு நெரிச்சுக்கொண்டு வருவான்;
கள்ளைக் குடிச்சுநீ துள்ளிவீ ழாதே;
       கஞ்சிமிஞ் சித்தென்று துள்ளாதே படுவா;
தெள்ளிப்போட உள்வாயில் திருப்படா மண்ணை;
       சேறுபோ லாக்காதே; பாலுபோ லாக்கு;
வள்ளலை நெனச்சுக்கொள், உள்ளபடி யாக;
       மணியாச மாச்சு. ஏலேலோ ஐலலோ (வேலனே)

(3)


மணியாசம் ஆனபின்பு
       கால்நான்கு மாநாக்குச் செப்ப னிட்டுத்
தணிகைமலை முருகன் தாளைத் துதித்துத்
       தெய்வானை வள்ளியின் பாதங்கள் போற்றித்
தறிநாக்கு நட்டதில் படைமரம் போட்டு...


திரியான படைச்சாய்ப்பில் சுண்டுவிரல் வச்சுச்
       செங்கல் நாக்குக்கு நங்கூரம் பாய்ச்சு;
மரமாக இருக்குமுன்னு எதிராக நட்டு
       வழுகாமல் விட்டம் சரியாகக் கட்டு.
[1] குறுக்கோலை கொண்டு ஒசத்தியே பாரு;

சிறுசாக விழுதுகொண்டு நடுமையம் கட்டு;
       திட்டுமட்டு மாகக் கெட்டியாக் கட்டு;
இறுக்கிமணல் சலம்வார்த்துக் கத்திரிப்புணி பாரு
       எங்குமே செவ்வனாக் கண்டுநீ பாரு;
              ஏலேலோ மயில் வேலோனே!


  1. (பி.ம்.) *குருத்தோலை