பக்கம்:ஐந்திணை வளம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 77 இன்பநினைவு ஒன்றே மேலெழுந்து நின்று கவிந்திருந்ததால், அவன் மனம் தன் போற்றாஒழுக்கத்திலே ஒரு புதிய நிறைவைப் பெற்றுத் திளைப்பதாயிற்று. இந்தநிலையிலே, அவன் மனைவி ஆண்மகவைஈன்றாள் என்ற செய்தி கிடைத்தது. அவன் உள்ளம், அப்போது, அச் செய்தியைக் கேட்டபோது, தன்னை மறந்து தன் மகன் என்ற நினைவிலேயே சுழலத் தொடங்கியது. மகன் பிறந்த மகிழ்வினால் அவன் தன் இல்லத்திற்கு ஒடோடி வந்தான். மகனைப் பெற்றுத் தந்த தன் மனைவியை அன்புடன் போற்றினான். மகனின் வடிவழகிலே தன்னுடைய உள்ளம் இன்புற்றுக் களித்திருக்க, அவன் தன் காதற்பரத்தையையும் மறந்திருந்தான். - பிறந்த மகனுக்குப் பெயரிடல் முகங்காணுதல் ஐம்படை பூட்டல் ஆகியன முறையாக நிகழ்த்தும் விழா நாள் அவன் வீட்டிலே ஆடம்பரமாக நிகழ்ந்து கொண்டிருந்தது. அவனும் உளமகிழ்வோடு, தன் மகனை அணைத்தெடுத்தவாறு, சூழநின்றார் வாழ்த்தி நிற்கத் தலைவியை நோக்கி வந்து கொண்டிருந்தான். - மேற்பாகத்தே சிறிதான காயினைப் பொருந்தியதாக விளங்கும் வஞ்சிக் கொடியின் நினைவு, அவன் வரவினைக் காணுகின்றபோது, தலைவியின் தோழிக்கு ஏற்படுகின்றது. கணுக்கள் சிதறுவதால் தோன்றும் முத்தினைப் போன்ற தன் மகனை, மார்பிடத்தே நெருக்கிப் பிடித்தவனாகத் தலைவன் வருகின்றான். அவனுடைய அழகிய மேலாடை அதனாற் சிதைகின்றது. அவனோ, அதனைப் பொருட்படுத்தாது, தன் பேறான செல்வனைச் சுமக்கும் அந்தச் செவ்வியிலே திளைத்தபடிவருகின்றான். அந்தக் காட்சியைக் கண்டதும், தோழியின் மனம், பெரிதும் மகிழ்ச்சி கொள்ளுகின்றது. தலைவியை மறந்து, பரத்தையை விரும்பிக் கிடக்கும் தலைமகன், இனித் தன் மகனைப்பிரிய மணமின்றித் தலைவியையும் தண்ணளி செய்து இன்புறுத்துவான் என்று மகிழ்கின்றாள். தோழியின் இந்த மகிழ்வும், த்லைவனின்பால் உண்டாகிய புதல்வற்பாசமும் மூவாதியரைப் பெரிதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/85&oldid=761890" இலிருந்து மீள்விக்கப்பட்டது