பெருஞ்சித்தினர்
ஐயையைப் பெற்ற அன்னை என்றே மெய்யாய் எண்ணிறன்; மேன்மையாய் நடந்தான்!
அவன் பொருட் டாகவே அன்னே வாழ்ந்திடும் தவலறு கைந் தன்னே உணர்ந்தே, கற்றிடும் வேளை தவிரக் கனிவினல் 60 உற்ற தாயுக் குதவியாய் நின் முன்! எச்சிறு வினைக்கும் தானே எழுந்துபோய் அச்செனச் சுழன்றன் ஐயையும் மகிழ்ந்தாள்!
'அம்மா உண்டிரா? அயர்ந்துறங் கினி ரா? எவண்செலல் வேண்டும்?, எது செயல் வேண்டும்? 65 -எனும் படி அவளே இயைபுற வினவியும் உனும் படி உரைத்தும் உறங்கிடக் கேட்டும் கவலை யறும்படி கனிவுடன் வேண்டியும், அவளே மகிழ்வித்து, அவள்முகம் மலர்த்தி, ஈன்றவள் ஒருத்தியே என்னினும் அவட்குத் 70 தான், அவள் மகன் றன், தன்தாய் அவள் தான் என்றே உண்ர்த்தின்ை ஐயையும் ஈன்றிலா தொன்றே தன் குறை எனவுணர்த் துவகை பெற்ருள்; பெற்றி டாப் பேற்றைப் பெற்றதாய் உற்ருள்; உண்ர்ந்தாள், உலக இன்பெலாம் 75 வந்து குவிந்ததாய் வாழ்த்தி, இறையருள் தந்த நிறைவுெனத் தானுணர்ந் தாளே!
இ.இ இ.இ
53