பக்கம்:ஐயை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரஞர்

பின்னும் முதல் மனமே

ஆங்கெழுந்து பேசியது:

"அன் இன நினைவை

அடியாய் மறந்தனையா? உன்னே வளர்ப்பதற்கும்

உன் முன் படிப்பினிற்கும் என் இனத் துயருற்ருர்!

ஈகஞ்செய் தார்,தம்மை நீ,மறந்து போகாதே’

-என்று நிகழ்த்திடவும் 35 தீயுறழ்ந்து காய்ச்சுதல்போல் எண்ணத் தெறலெழவே, "நான் மறவேன்; நான்மறவேன்" என்று வெளிப்படையாய், ஆன்று கதறிவிட்டான்! .

ஐயை துடிதுடித்தே,

"என்ன தம்பி! என்ன இது?

எவரை மறவாய்,நீ7 என்ன கனவு கண்டாய்' -

என்றவனின் நெற்றியைப்போய்த் 40 தொட்டுப்பார்த் துள்ளம்

துணுக்குற்றுக் 'காய்ச்சலின்னும் விட்டபா டில்லையே!

நான்போய் விரைவாகத்

63

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/133&oldid=1273594" இலிருந்து மீள்விக்கப்பட்டது