பக்கம்:ஐயை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரனர்

குன்று வெடித்துச் சிதர்ந்ததுபோல்-ஒரு

கோடிமின் னல்வந் தெரித்ததுபோல், நின்ற கடல் பொங்கி வந்ததுபோல்-கனல்

நீள எரிந்து சுழன்றது போல், சென்ற கதிரற்று விழ்ந்ததுபோல்-ஒரு

சிற்றப் புயல்வந்து சீர்த்ததுபோல், கொன்று சிதைத்துத்தன் ஊனுடலை-பல

கோடிக் கழுகுகள் தின்றதுபோல், 5.

நின்றது போல், அங்கு வீழ்ந்ததுபோல்-விழி

நேருக்கு வேல்வந்து பாய்ந்ததுபோல், சென்றது போல், அங் கிருந்ததுபோல்-அவள்

செத்தது போல், உயிர் வந்ததுபோல், வென்றது போல்,உடன் தோற்றதுபோல்-உடல்

வெள்ளெலும் பெல்லாம் எழுந்ததுபோல், மென்றுதன் ஊன்தசை தான் விழுங்கி-தன்

மேனி அரத்தம் குடித்ததுபோல், ! 6

ஐயையும் பேரிடி காங்கலுற்றள்-இனி

ஆர்வந்து கேற்றினுந் தான் திரும்பாள்!

"பொய்யைச் சுவையென. உண்டுநிதம்வாழும்

போக்கிலிச் சூரர் மறைவரைக்கும்,

மெய்யுக்கு வாழ்வில்லை' என்றுரைத்தாள்!-தன்

. மேனித் தசைவற்ற வெய் ஆயிர்த்தாள்!

கையுக்குக் கையாகக் கொண்டுவிட்டேன்-உயிர்க்

காவல் எனக்கில்லை என்றுசொன்னுள் 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/177&oldid=1273639" இலிருந்து மீள்விக்கப்பட்டது