பக்கம்:ஐயை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர்,

இருவர் நெஞ்சிலும் இரும்பாய்க் கனத்தன ஒருவர்க் கொருவர் ஆறுதல் உரைத்தனர்.

ஐயை நாளும் குன்றினை அடைவாள்! மைப்பெருங் கல்மேல் மனச்சுமை அவிழ்ப்பாள்! அவன்வர வெண்ணி அடுக்கிய கற்களைத் 660 துவளுற மீண்டும் எண்ணத் தொடங்குவாள்! நகரப் பெருவழி மேல்விழி நாட்டுவாள்! தகவுற விழிவழி நெஞ்சம் தாவியே குன்றும் காவும் ஊரும் கடந்து சென்று கல்விக் கழகத்துச் செம்மலின் 665 நெஞ்சத்துக் குடிபுக நின்று கதறும்! கொஞ்சமும் அவனுளம் இரக்கம் கொளாதே! ஆயினும் அவ்விடம் அகலா தவன் கால் நாயெனச் சுற்றும் நம்பியும் தும்பையும் விகளயாட் டயர்வதைக் கண்டு வெதும்பும்! 670 களிப்புறு காதலிற் கன்னியும் அவனும் . பின்னிப் பிணைவதைப் பார்த்துப் பேதுறும் நன்னர் அவர்செய் இல்லறம் நயக்கும்! இறுதியில் ஐயை இருப்பிடத் திரும்பும்! பரிதியும் சாயும்! ஒருநாள் பறக்கும்! $75 மறுநாள் மீண்டும் மனத்திரை விரியும்! உறுபல நிகழ்ச்சியும் உருவெத்ே தாம்ே!

38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/52&oldid=1273513" இலிருந்து மீள்விக்கப்பட்டது