பக்கம்:ஐயை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை.

செம்மலை மீண்டும் பார்த்திடத் துடித்தாள்! வெம்பிய காதலை விளக்கிட எண் ணிள்ை! கண்ணி ராலவன் கால்களைக் கழுவி 680 உண்ணே ராவியை அவன்மடி ஊழ்க்க இசைவு தரும்படி இறைஞ்சி நெஞ்சினைப் பிசைந்து அவன் கைப் பிழிந்திடக் கருதினள் அப்படிச் செய்யினும் அடியொடு மறுத்தால் எப்படி யாகிலும் அத்தையோ டிணத்து 685 வைப்பதே தனக்கு வாழ்நாட் பயனெனச் செப்பிய துள்ளம்! காதற் செல்வியும் ஒப்பினுள்; ஆயினும் ஒருவழி உணராள்! கொப்பிலாக் கொடியென உடலங் குலைந்தாள்!

ஐயை இவ்வாறு அவனையே நினைந்து 690 கையற் றேங்கிட அத்தையோ கன்னிமேல் உள்ளம் வைத்து மெழுகாய் உருகிள்ை! கள்ள மிலாதவள் காதல் கதைக்கே நெஞ்சு நெகிழ்ந்தாள் நீராய் உகுத்தாள்! கொஞ்சுகி லர்க்கிளிக் குஞ்சினை நெருப்பினில் 695 தூக்கிப் போட்ட தூய்மை யிலான

39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/53&oldid=1273514" இலிருந்து மீள்விக்கப்பட்டது