பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露器&莎 急莎9夺 麗魯麗 படமெழுதும் சித்திரத்தில் பாண்டிய மன்னர் வடிவுகண்டு குடமுலையாளசை கொள்ளக் கோலமதன் பூவைக்கொள்ள வண்டனையாள் தடமுலைமேல் மாரனம்பு தைத்திடவே துடமருவின் குழலனையாள் துவண்டு மனம் நடுநடுங்கி குலசேகரன் மேல் மையல் கொண்டாள் பார்த்திருந்து மாது நல்லாள் பாண்டியர்கள் ஐவரிலும் மூத்தவர் தன்னழகு கண்டு மயங்கி மெத்தமயங்கி + விட்டாள் கூந்தலது தான் குலைந்து கொடியிடையாள் தள்ளாடி . நின்ருள் பூந்துகிலும் பேணுமல் பூவணமேல் சரிந்தாள் ஏந்து கொங்கை மயிலனையாள் யிளமதிக்கும் தென்றலுக்கும் சோர மதன் கணை தனக்கும் துயர்தனுக்கும் இலக்காளுள் மன்னருட திருவழகால் வரிக்குயிலும் தென்றலுக்கும் கன்னல் வல்லி பூங்கனையும் கடல் முரசும் குழலிறைக்கும் கொள்ளை கொள்ள உயிர்நடுங்கிக் கொம்பனையாள் . சோர்ந்து விட்டாள் உள்ளெழுந்த நெடுமூச்சுற்ற தொன்று மறியாமல் தெள்ளு தமிழ் பாண்டிமன்னர் திருவடிவைக் கண்ட போதே விள்ளுமதி தானறியாள் மெல்லி நல்லாள் கொண்டமைங் கள்ளனறுங் குழலலைந்து காமருவும் ஆத்துதிர வள்ளல் மதன் கணையாலும் வரிவண்டி னிசையாலும் ஆடான செம்மஞ்சள் நீரமுழுதாள் தலை முடியாள் 2600 ஏடாருங் குழல்முடியாள் மார் தனத்தில் கச்சாணியாள் 26 10 வேல்விழி மையெழுதாள் மெய்நுதலில் செந்தூரமிடாள் சீப்பு மிடாள் மயிர்கோதாள் சிலம்பணியாள் தலம்பாவாள் காப்புமிடாள் கரந்தனிலே கனகமணிதான் பூணுள் சந்திரன் தன் கதிர் விரியத் தணியாத வெகுமயலாள் அந்தரத்தில் குளிர் வாடையன லாகவே வீச பூசிடுவார் சந்தனத்தைப் புனுகு பன்னீர் அப்பிடுவார் வீசிடுவார் சாமரைகள் மிகுந்ததொரு பன்னீரால் ஆசை கொண்டதறியாமல் யனேக மெலலாஞ் செய் - திடுவார் பூசல் கொண்ட விழிமயிலாள் போகமுடகெ பூந்திருந்து மங்கை நல்லாள் புடைசூழ வருத்தமின்றி தானடைந்து கங்கையன்றிக் கன்னடியன் தன்னருகே செல்லுவாளாம் கைவளைகள் கழன்ருெழுகக் கால்கள் தடுமாறியவள் எய்துமவள் உயிர்நடுங்கி விழுவாரைப் போல்நடந்து