பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蟹盛盛 雳密罗翰 263 so 2640 கன்னடியனிடம் அவனது மகள் கூறுவது அந்த வண்ணந் தகப்பனுட யண்டையிலே சென்று நின்று மூந்தியடி தொழுதிறைஞ்சி மொய்குழலாள் ஏது சொல்வான் படையாலே பெரியவனே பலசக்கர முடையோனே அடையலரை வென்றவனே ஆள்வீரஞ் செய்தவனே நீண்டபெரும் புகழானே நித்திய கவி யாணனே கேள் ஆண்டவரே என்னுடைய ஐயாவே ஒன்று கேளிர் தென்னடுதனிலே தான் சிறந்த முடிப்பாண்டியர்கள் மன்னவர்கள் ஐவரிலும் வடிவுடைய குலசேகரர் அவர் தனக்கு மாலையிட ஐயாவே அருளுமென்ருள் புவனமெல்லாம் ஆண்டவனே புரவி கடலுடையவனே நானிருந்து சடைத்திடினும் நரைத்தமயிர் முடித்திடிலும் ஊனிருந்து கனிந்திடினும் உயிர் இழிவு வந்திடினும் கொற்றவளுர் பாண்டிமன்னர் குலசேகரர் தன்னையன்றி மற்ருெருவர் தனக்கினி நான் மாலையிட நினைப்பதில்லை தொழுது நின்ற மாது நல்லாள் துடியிடையாளேது சொல்வான் எழுத வெண்ணுச் சிலைவடிவு யிலங்கு முடிப்பாண்டியர்க்கு பழுதறவே மாலையிடப் படியருளாயாமாகில் அழுத கண்ணிர் மாருமல் அக்கினியில் வீழ்ந்திடுவேன் வாழ்வதில்லை யொருவனுடன் மன்னவளுர் தன்னையன்றி விழுவதுதான் நிச்சயமே வெந்தணலிலென வுரைத்தாள் மகள் மொழிந்த வார்த்தைகேட்டு மனம் நடுங்கி கன்னடியன் கன்னடியன் துணதனுப்புதல் புகழ் பெரிய ஒட்டனையும் போகவிடத் துடங்குவாளும் இயலற்ற குதிரைப்படை எல்லையில்லாப் பொன் கொடுப்பேன். மணக்குழலாளென் மகளை மாலையிடச் சொல்லு கென்ருன் கெங்கைமட்டு மாண்டிடலாம் கீர்த்திபெற்று வாழ்ந் . திடலாம் மங்கை நல்லாளென் மகளை மாலையிடச் சொல்லுமென்ருர் ஒட்டன் வார்த்தை சொல்லி உறுதி பலதானுரைத்து வாட்டமற ஒட்டனுந்தான் வழி நடந்தான் சடுதியிலே கன்னடியன் ஒட்டனுந்தால் கால்கடிய சேவகனும் உண்ணுமுன்னே காதவழியொரு நொடியிலேயோடு - w வாளும் சிறுகுருவி பறந்தாப் போல் தேசமெல்லாத் தான்கடந்து