பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்து நாளைப் பெருவழியை ஒரு பகலிரவு ஓடுவாளும் கம்பையாத்தங் கரைகடந்து காஞ்சிபுரந்தானும்பிட்டு செம்பொன் முடிச் சோழநாடு தென்மதுரைப் பதியும் விட்டு மாயத்தாலெண்ணமிட்டு வாரானே ஒட்டனவன் 2650 கயத்தாறும் கடம்பூரும் கங்கை கொண்டான் தான் கடத்தான் ஒட்டமின்றி ஒடுவானம் நல்லூர் திடியூருமிட்டு பட்டபுரம் மோலாபுரம் பாங்குடனே தான் நடந்தான் வட்டமிட்டு மயிலாடும் வள்ளியூர் தனிலே வந்தான் இஷ்டமுடனேடியங் கேயிளைப்புடனே செல்லுவானம் பல்லக்கு தண்டிகையும் பரதேசிருவுத்தான் மாரும் எல்லையில்லாப் பெரும்படையும் யேக்கமற்ற கரிபரியும் சேவிக்கும் பரிகலமும் சேவகரும் செருமி நிற்க கோவில்க்கால் வாசலிலே கூண்டு அங்கே செல்லுவானம் 罗露翁G £870 ஆணிப்பொன் கதவடைத்து அணிவயிரத் தாழுமட்டு மாணிக்க வாசலிலே வந்து நின்ருன் ஒட்டனவன் கன்னடியளுேட்டனென்று காரியமாய்ச் சொன்னபோதே முன்னடியில் நின்றவனும் முடிபொருந்த பாண்டியற்கு சென்று சொல்ல ஒடுவானும் திருநீலகண்டன் ஒட்டன் அஞ்சியடி தொழு சிறை உற்றமொழி சொல்லுவாளும் திருபயிலும் மாலைமார்பா சிறந்த முடிப்பாண்டியர்கள் ஒருவராலும் வரக்கூடாத உம்முடைய வாசலிலே கருத்துடனே ஒருவன் வந்து கன்னடியன் ஒட்டனென்ருன் விருப்பமுடன் வந்து நின்று வேண்டுவது சொல்லுமென்ருன் 4. சீர் சிந்து அந்தமொழி கேட்டபோது அழகு பொன் பாண்டியர் அழகான திருநீலகண்டளுேடு சொல்வான் இந்த நேரத்திலே மந்திரிமார் சேர என்னைப்பார் உன்னைப்பார் என்று பாவித்து இப்பொழுது வரவேணும் திருநீலகண்டர் என்று திருவிளம் பற்றியம்பி விட்டாரே அப்பொழுது திருநீலகண்டனுடன் சொல்வார் ஆன மந்திரிமார்களோடேது மொழி சொல்வார் எப்பொழுதும் வாராத கன்னடியனேட்டன் ஒட்டின் பலவூர்களைக் கடந்து சென்ருன். அவ்வூரின் பெயர் களைச் சொல்வது. அவ்வூரார் முன் பாடும் போது அவர் களுக்கு மகிழ்ச்சியளிப்பதற்காகவே இதுவோர் மரபு.