இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
20 ஒன்றே ஒன்று
கள்ளிய புக்கால் கவிகள் ஒட் . டார்: கடல் நஞ்சுஅயின்ருய் கொள்ளிய அல்லகண் டாய் புன்சொல்;
ஆயினும் கொண்டருளே.
(அயின்ருய் உண்டவனே! கொள்ளிய-கொள்ளத் தகுவன. புன் சொல் பொலிவற்ற சொல்; சொல்லுக்குப் பொலிவாவன பொருட் சிறப்பும் ஒசை யினிமையும்.)
தெள்ளிய மாந்தர் என்றது சிறந்த கவிஞர்களே: "உளங்கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவற் புல வோர்’ (சகல கலாவல்லி மாலை) என்று குமரகுருபரர் புல வரைச் சிறப்பித்துச் சொல்வார்.
சேரமான் பெருமாள் காயனர் சொல்வது அத்தனையும் பொய் என்று இந்த அழகிய பாட்டே காட்டவில்லையா?
இது பொன்வண்ணத்தந்தாதியில் 24ஆம் பாட்டு.