பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழகத்தின் தொன்மைக் குறிப்புக்கள்

௧௯௩


மக்கள் ஐந்திணை நிலத்திற்குப் பிரிந்து போவது, குறிஞ்சி யினின்று போவதும், அயல் நாட்டினின்று வந்து குடி புகுந்து போவதுமாக இருவகை. இவற்றுள்,முன்னது மக்கட்பெருக் கால் படிப்படியாய் திகழ்லது ;பின்னது தெரிந்து கோடலால் ஒரே சமையந்தும் நிகழக்கூடியது. இவற்றுள் முன்னதே தமிழ் நாட்டில் நிகழ்த்ததென்க.

குறிஞ்சியில் மட்டும் மக்களிருந்த காலமுமுண்டு. அது மாந்தன் தோற்றத்திற்கு அடுத்த நிலையாகும், தமிழ் நூல்கள் தோன்றியது மருதத்தில் நகரம் தோன்றிய பின் பாதலின், குறிஞ்சியில் மட்டும் மக்களிருந்த தொன்னிலை அப்போது மறைந்து போயிற்று. அதனாற் குறிக்கப்பட வில்லை. ஆயினும் அதைக் கருத்தளவையான் அறிந்து தொள்ளலாம்,

மாந்தன் தோற்றம் ஆணும் பெண்ணுமாய்த் தாளிருந்திருக்க வேண்டும், அவரையே ஆதம் ஏவையென்று கிறித்து மதமும் இஸ்லாம் மதமுங் கூதுகின்றன,

இருமுது பெருங்குரவரினின்றும் பல மக்கள் தோன்றிய பின், குறிஞ்சியில் இடம்போதாமல், சிலர் முல்லைக்குச்சென்றனர்.

முதற்காலத்தில் உணவு தேடுவதே மாந்தர் தொழிலா யிருந்தது. குறிஞ்சியில் காய்கனிகளைப் பறித்தும் வேட்டை யாடியும் உண்டுவந்த மக்கள், இயற்கையாய் விளையும் மர வுணவு போதாமை யாலும், வேண்டியபோ தெல்லாம் ஊலுணவு கிடையாமையாலும், செயற்கையாய்ப் பயிர் பச்சைகளையும் விலங்குகளையும் வளர்க்கத் தொடங்கினர். இதற்கு மரமடாத்த குறிஞ்சி வசதியாயிராமையால் முல்லைக்குச் சென்றனர். இதனால் கொடிய விலங்குகட்கும் ஓரளவு தப்பினர்.

மாந்தன் முதன் முதலாய் வளர்த்த விலங்கு ஆவே: ஆ என்பது மா என்பதன் மெய் நீக்கம் மா என்று கத்துவது மாவெனப்பட்டது. மா-மான்-மாடு. மா என்பது னகர மெய்யீது பெற்று, ஆவிற்கினமான மானை உணர்த்திற்று. ஆ என்பது மாடு என்பது போல முதலாவது பொதுப்பெயரா யிருந்து, பின்பு பெண்பாலுக்கு வரையறுக்கப்பட்டது. முதலாவது வளர்க்கப்பட்ட விலங்கு மா ஆ) வாதலின் அதன் பெயர் விலங்கினத்திற்கெல்லாம் பொதுப் பெயராயிற்று. ஆ - என்பது னகர வீறு பெற்று ஆன் என்றாயிற்று.