பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௯௪

ஒப்பியன் மொழி நூல்

மரவுணவும் ஊனுணவும் மக்கட்த வேண்டியவாயுள் எமையின், உழவும் ஆவோம்பலும் ஒருங்கே தோன்றின வென்ன லாம். ஆவானது பால் தந்ததுடன் உழவிற்கு வேண்டிய கன்றுகளையும் ஈன்றது. புல்வெளிகளில் மாடுகளை மேய்த்துக் கொண்டு, சிறிது புன்செய்ப் பயிர் களையும் வினைத்துக் கொண்டனர் முல்லை நிலத்தார்.

மாடு பறையரால் மட்டும் தின்னப்படுகின்றது. மேனாடு களில் அதை எல்லாரும் உண்கின்றனர்.

முல்லை நிலத்திற் போதுமான நீர்வளமும் நில வளமு மில்லாமையால், மக்கள் அடுத்தாற்போல், மீனை பெரிதும் விரும்பினவர் நெய்தல் நிலத்திற்தம் கூலத்தைப் பெரிதும் விருப்பினவர் மருத நிலத்திற்குமாகப் பிரிந்து போயினர்.

பாலை நிலவாணர்க்கு முதுவேனிலில் உணவு கிடையாமையால், அன்று அவர் ஆறலைக்கவும் சூறை கொள்ளவும், நேர்ந்தது.

ஐந்து நிலத்திலும் மாத்தர் பரவியபின், குறிஞ்சி நிலத்தார் குறி சொல்வதால் குறவர் என்றும், பாலை நிலத்தார் போர்த் தொழில் செய்து மறம். (வீரம்) சிறந்திருந்தமையின் மறவர் என்றும், முல்லை நிலத்தார் குறிஞ்சிக்கும் மருதத்திற் கும் இடையிலிருந்தமையால் இடையர் என்றும் ஆவைக் காத்தலால் ஆயர் என்றும், மருத நிலத்தார் உழவைச் சிறப்பாய்ச் செய்ததால் உழவர் என்றும், நெய்தல் நிலத்தார் படவுத் தொழில் செய்தமையின் படவர் அல்லது பரவர் என்றுங் கூறப்பட்டார்.

படகு படவு: க--வ, போலி, படவர் - பரவர்-பரதவர் ட, ர, போலி, படவர் செந்நிறமா யிருப்பதால் செம்படவர் எனப்பட்டார், பரதவர் விரித்தல் திரிபு.

நகர வாழ்க்கை நிலை :

மாந்தர் மருத நிலத்திற்கு வந்த பின் நிலையாய்க் குடியிருக்கத் தொடங்கினர்!. அதனால் குடியானவர் எனப் பட்டனர். நிலையாய்க் குடியிருந்ததினால், மருத நிலத்தூர்கள் மூதூரும் பேரூரும் நகரும் மாநகருமாயின, மருத நிலத்தூர்கள் பிற நிலத்தர்களினும் பலவகையிற் சிறந்திருந் தமையால், கார் என்றே யழைக்கப்பட்டன.