பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழகத்தின் தொன்மைக் குறிப்புக்கள்

௧௯௫

உயர் நகர் என்னும் பெயர்கள், முதலில் தனி வீட்டையும், பின்பு, வீட்டுத் தொகுதியான உரையும் குறித்தன. நகர் என்பது பிற்காலத்தில் பேரூருக்கு வரையறுக்கப்பட்டது.

நிலையான வாழ்க்கையாலும், மாந்தர் பெருக்காலும், முதன் முதல் நகரத்திலேயே நாகரிகம் சிறப்பாய்த் தோன் றிற்று. நாகரிகம் என்னும் சொல்லும் நகரம் என்னும் சொல்லினின்று பிறந்ததே. அது முன்னர்க் கூறப்பட்டது.

அரசியல்

மாந்தர் நிலையாயுள்ள இடத்தில் ஆட்பொருட் பாதுகாப்பிருப்பதும், நிலையில்லாத இடத்தில் அவையில் லா திருப்பதும் இயல்பு. மருத நிலத்தில் மாந்தர் நிவையா யிருந்தமையின், ஆட்பொருட் பாதுகாப்பிற்கு முதலாவது காவலும், பின்பு ஊராண்மை நாட்டாண்மைகளும், அதன் பின் அரசியலும் தோன்றின

குடிகளை ஒரு மத்தை போன்றும் அரசனை அதன் மேய்ப்பன் போன்றுங் கருதினர். அதனால், அரசன் கோன் எனப்பட்டான். அவன் கையில், அரசிற்கு அடையாளமாக ஒரு மேய்ப்பன் கோலுங் கொடுக்கப்பட்டது. அது நேராயிருந்தமைபற்றிச் செங்கோல் எனப்பட்டது. செங்கோல் செம்மையான அரசாட்சிக்கு அடையாளம்.

கோ= பசு. கோ+ அன் கோவன்--கோன் - கோ (ன்). கோன் என்னும் சொல் ஆவென்னும் பொருளில் ஆரிய மொழிகளிற் பெரு வழக்காக வழங்குகின்றது:

Swed.---Dan: ko, Du. koe, Sans. go, Ger. kub, Ice. kyr, Irish.-- Gael. bo, Lg bos, Gr. bous.

கோ என்னுச் சொல், ஆவென்னும் பொருளில் தமிழில் வழங்காமையாலும், ஆரியத்தில் வழங்குவதினாலும் அதை ஆரியச் சொல் என்று கொள்ளற்க. பசுவைக் குறிக்க, ஆ. பெற்றம் என ஏனையிரு சொற்கள் வழங்குவதினாலேயே, கோ என்னும் சொல் அப்பொருளில் வழக்கற்றதென்க;

கோவையுடையவன் கோன். அன் ஈற்றில் அகரம் தொக்கது. ஒ. நோ, யாவர்-யார்.