பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழகத்தின் தொன்மைக் குறிப்புக்கள்

௧௯௯

நொடிப்பழமை, பழமை பேசுதல் என்னும் வழக்குகளை நோக்குக:

வழிபாடு - Cults,

ஐந்தினைத் தெய்வம் : "

மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே

என்பது தொல்காப்பியம் (அகத். 5);

முல்லைத்தெய்வம் மாயோன்

மா = கருப்பு. மாயோன் கரியோன். மாயோனுக்கு மால் என்றும் பெயர், மால் கருப்பு, மேகம், வானம், கரியோன் முல்லை நிலத்தில், மேலே எங்குப் பார்த்தாலும் நீல அல்லது கரிய வானமும் மேகமுமாய்த் தோன்றுவதாலும், ஆதிரைக்கு வேண்டிய புல்லும் ஆயர்க்கு வேண்டிய வானவாரி அல்லது புன்செய்ப் பயிர்களும் வளர்வதற்கு மழை வேண்டியிருப்பதாலும்,மேகத்தை வானத்தோ டொப்பக் கொண்டதினாலும், முல்லை நிலத்தார் தங்கள் தெய்வத்தைக் கருமையானதென்று கருதி, மாயோன் என்றும் மால் என்றும் பெயரிட்டனர். திருமால் என்பதில் திரு என்பது அடை.

முல்லை நிலத்திற்குரிய கலுழனை (கருடனை)யும் துளசியையும், முறையே மாயோனுக்குரிய மர்தியாகவும் பவாகவும் கொண்டார்கள்.

குறிஞ்சித்தெய்வம் சேயோன்

சேயோன் - சிவந்தவன், சேயோன் சேந்தன் சிவன் என்பன ஒரு பொருட்சொற்கள் : குறிஞ்சியில் மூங்கிலால் அடிக்கடி தீப்பற்றிக் கொண்ட தினாலும், தீ அஞ்சத்தக்க தான திலாதும். அதைத் (தெய்வமாக அல்லது) தெய்வ வெளிப்பாடாகக் கொண்டு,அதற்குச் சேயோன் என்று பெயரிட் டார்கள்,

ஒ. மொ .-18