பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௦௦

ஒப்பியன் மொழி நூல்

சேயோனுக்குக் குறிஞ்சி நிலத்திற்குரிய மயிலை ஊர்தி யாகவும், சேவலைக் கொடியாகவும், கடம்பமலரைப் பூவாகவுங் கொண்டனர்.

கோழியை வீட்டில் வளர்த்தது பிற்கால வழக்கம். சூரபன்மன் மயிலுங் கோழியுமாகிக் கந்தனுக்கு முறையே ஊர்தியுங் கொடியுமானான் என்றது பிற்காலக்கதை. சேவல் போர் செய்வதிற் சிறந்த பறவையாதலால், அத்தொழிலிற் சிறந்த சேயோனுக்குக் கொடியுருவமாய்க் கொள்ளப்பட்ட தென்க.

சேயோனுக்கு முருகன், கந்தன், ஆறுமுகன் என்றும் பெயருண்டு. முருகு என்பது மணம், அழகு, இளமை என்னும் பல பொருள்களை யுடையது. தெய்வத்திற்கு அல்லது பேய்க்கு மணம் விருப்பமென்றும், மலரணிந்து கொண்டாவது மலருள்ள இடத்திலாவது பருவப்பெண்கள் தனிச்செல்லக் கூடாதென்றும், ஒரு கொள்கை தமிழர்க்குள் இன்றும் இருந்து வருகின்றது.

தெய்வம் இயல்பாக அழகுள்ளதென்று எல்லா மதத் தாராலும் ஒப்புக்கொள்ளப்படுகின்றது. இதனால் அழகன் என்று திருமாலுக்கும் சொக்கன் என்று சிவனுக்கும் பிற்காலத் இத் பெயர்கள் தோன்றின அழகு எப்போதும் இளமையொடு கூடியது. கோவையில் 'நிலைகண்டுரைத்தல்' என்னுத் துறையை நோக்குக.

கந்தன் என்னும் பெயர், சந்தில் (தூணில்) தெய்வ வுருவைப் பொறித்த அல்லது செதுக்கிய பிற்காலத்தில் தோன்றின தாகத் தெரிகின்றது. கந்திற்பாவை என்னும் வழக்கை நோக்குசு, கந்தனையே ஸ்கந்தன் என்றளர் வட நூலார். ஆறுமுகம் என்னும் பெயர் பின்னர்க் கூறப்படும்.

மருதத்தெய்வும் வேந்தன்

வேந்தன = அரசன்,

தல்வினை செய்தவரின் உயிர்கள் இறந்த பின் மேலுலகத் சிற்குச் செல்லுமென்றும், உலகில் (மருதநிலத்தில்) அரசனா விருந்தவன் மறுமையில் மேலுலகத்திலும் அரசனாவான் என்றும், மருத நில மாந்தர் கருதி, முதன் முதல் இறந்த