தமிழகத்தின் தொன்மைக் குறிப்புக்கள்
௨௦௧
அரசனையே வேந்தன் என்று பெயரிட்டு வணங்கினார்கள், மழை மேலிருந்து பெய்வதால், மேலுலக வேந்தனாகிய தங்கள் தெய்வத்தினிட மிருந்தே வருவதாகக் கருதி,மழை வளத்திற் காகவும் அவனை வழிபட்டார்கள்.
நல்வினையாவன வேளான்மையும் போர்த் தொழிலும், போர்த்தொழிலில் ஒருவன் பிறர் நன்மைக்கென்று தன் உயிரைக் கொடுத்தலால், அது தலைசிறந்த வேளாண்மை யாகும். சிறந்த இல்லறத்தார்க்கும் போரில் பட்ட மறவர்க்கும் மறுமையில் வானுலகம் என்பது. அவர் வேளாண்மையிற் சிறந்தவர் என்னும் கருத்துப் பற்றியே,
செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு
என்றார் திருவள்ளுவர்.
26 ஆம் புறப்பாட்டும் இக்கருத்துப்பற்றியதே.
"நீள்கழன் மறவர் செல்வுழிச் செல்க" (புறத். 93)
என்பதனால், போரிலி தந்தவர் வானுலகம் புகுவர் என்ற கொள்கையறியப்படும்.
உழவுத்தொழில் செய்யும் பள்ளரும் போர்த் தொழிற்குரிய மறவரும், இன்றும் தங்களை இந்திர குலத்தாரென்றும், தங்கள் குலமுதல்வன் இந்திரனென்றும் கூறிக்கொள்கின்றனர். அரசனிடத்தில் வேளாண்மையும் போர்த்தொழிலும் ஒருங்கேயுண்டு, அவன் இம்மையிலும் மழைக்குக் காரணமாகக் கருதப்பட்டான்.
"இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
என்றார் திருவள்ளுவர்,
வேளாண்மைக்குச் சிறந்த உழவர் குடியிருப்பதும், சிறந்த அரசு முதன் முதல் தோன்றியதும் மருத நிலமே.
பாலை நிலத்து மறவர் படை ஞராகுமுன், மருத நிலத்து உழவரே போர்த்தொழில் செய்து வந்தனர். அதன் பின்பும் உழவர் போர்த்தொழிலை விட்டுவிடவில்லை. இதை,