பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௦௨

ஒப்பியன் மொழி நூல்

“வேந்துவிடு தொழிலிற் படையும் கண்ணியும்
வாய்ந்த னர் என்ப அவர் பெறும் பொருளே"

(மரபு. 77)

என்று தொல்காப்பியங் கூறுவதாலும், மள்ளர், மழவர் என்னும் பெயர்கட்கு உழவர் மறவர் எள்னு மிருபொருளு முண்மையாலும், உழவர் குலத்தில் ஒரு வகுப்பார் படையாட்சி யென்று பெயர் பெற்றிருப்பதினாலும், மேனாட்டிலும் கீழ்நாட்டிலு மிருந்த பண்டை அமர நாயக முறை (Feudalism) யாலும் அறியலாம்.

பண்டைக்காலத்தில் அரசரையும் தெய்வமாக வணங் கினர் என்பது, இரணியன், நேபுகாத் தேச்சார் முதலியார் சரித்திரத்தாலும், அரசனும் தெய்வ முமிருக்குமிடம் கோயில் என்று கூறப்படு வதினாலும், அரசனுக்கும் அரசிக்கும் தேவன் தேவி என்னும் பெயர்கள் வழங்குவதாலும், திருவாய்க் கேள்வி திருமந்திர வோலை முதலிய அரசக அலுவற் பெயர்களாலும், பிறவற்றாலும் அறியப்படும்,

வேந்தன் என்னும் பெயரை யே, இந்திரன் என்று ஆரியர் மொழிபெயர்த்துக்கொண்டனர். இந்திரன் = அரசன். நரேந் திரன், மிருகேந்திரன், கவீந்திரன் முதலிய பெயர்களை நோக்குக.

நூறு குதிரைவேள்வி வேந்தன் (இந்திரன்) பதவிக்குத் தகுதியாக ஆரியப்பழமை நூல் கூறும்: குதிரை வேள்வி செய் பவன் அரசனே.

கடைக்கழகக் காலம் வரை வேந்தன் வழிபாடு தமிழ் நாட்டிற் சிறந்திருந்ததென்பது, சிலப்பதிகாரத் தாலும் மணி மேகலையாலும் பிற நூல் குறிப்புக் களாலும் அறியப்படும்.

(ஆயர்பாடியில் வேந்தன் வழிபாட்டை நிறுத்திய) கண்ணன் வழிபாடு வரவரத் தமிழ்நாட்டில் வலுத்ததினாலும், நகர மாந்தருள் உழவர் சிறுபான்மையான தினாலும், வேந்தன் மழைவளம் ஒன்றே தரும் சிறுதெய்வமாதலாலும், சைவம் திருமா லியம் என்னும் இரண்டும் வீடுபேற்றிற் குரிய பெரு மதங்களாய் வளர்ந்து விட்டமை யாலும், வேந்தன் வணக்கம் பெரும்பாலும் நின்று விட்டது. இதுபோது ஒரோவோரிடத் துள்ள மழைத்தெய்வவுருவமே பண்டை வேந்தன் வழிபாட் டின் அடையாளமாயுள்ளது.

மருத நிலத் தெய்வத்துக்குப் பண்டிருந்த பெருமையை, அகத்தியர் வேந்தன் சிவிகையைச் சுமந்ததாகத் திருவிளை