௨௦௪
ஒப்பியன் மொழிநூல்
ஆகவே, வாரணன் என்னும் பெயரே வருணன் என்று, வடமொழியில் திரிக்கப்பட்ட தென்க.
பாலைநிலத்தெய்வம் கொற்றவை
பாலை நிலம் முதுவேனிற்காலத்தால் தோன்றுவது,
கொற்றம் + அவ்வை = கொற்றவ்வை - கொற்றவை. கொற்றம் = வெற்றி. அவ்வை அம்மை என்பதன் போலி, பிற்காலத்தில் பாட்டியைக் குறித்தது.
பாலை நில மாந்தராகிய கள்ளர் மறவருக்கு. அவரது போர்த் தொழிலில் கொற்றத்தைத் தருபவள் கொற்றவை,
கொற்றவைக்கு அம்மை, மாயோள், காளி, அங்காளம்மை, மாரி, பிடாரி, கன்னி , குமரி, பசுவதி முதலிய பிற பெயர்களுமுண்டு. அம்மை = தாய்,பெண்தெய்வம். முதுவேனிற் காலத்தில் வெப்பத்தினால் தோன்றும் வைசூரிநோய், அம்மையால் தோன்றுவதாகக் கருதப்பட்டு அம்மை எனப்பட்டது. அக் காலத்தில் தழைக்கும் வேப்பிலையும் அம்மைக்குகந்த தாகக் கொள்ளப்பட்டது.
அம்மை (அம்ம) என்பதின் திரிபே அம்மன், அம்பா (வ.), என்பவை,
மாயோள் = கரியள். - மாமை-கருமை.
கள்-காளம்-காளி, கள் --- கருப்பு. கள்ளம், களங்கம், காளான் (black mushroom) முதலிய சொற்கள் கருப்பு என்னும் மூலப்பொருளைக் கொண்டவை.
காளி வணக்கம் முற்காலத்தில் தமிழகத்தில் மிகச் சிறத் திருத்தது.வங்காளத்தில் உள்ள காலிக் கோட்டம் என்னும் இடப்பெயர் இன்று காளிக்கட்டம்-Culcutta - கல்கத்தா, என்று திரிந்து வழங்குகின்றது. கோட்டம் - அரண், கோயில், கோடு +அம் = கோட்டம். கோடுதல்- வளைதல், கோடிய (வளைந்த) மதிலாற் சூழப்பெற்றது கோட்டம் (தொழிலாகு பெயர்), கோடு+ஐ= கோட்டை . தமிழர் அல்லது திராவிடர் பண்டு வட இந்தியா வரை பரவியிருந்தனர் என்பதற்குக் காளிக்கோட்டமும் ஒரு சான்றாம்.