தமிழகத்தின் தொன்மைக் குறிப்புக்கள்
௨௦௫
கானி கூளி (பேய்) களின் தலைவி, பேயைக் கருப் பென்றும் இருளென்றும் கூறுவது உலக வழக்கு.
அம் + காளம் (அல்லது காளி) + அம்மை அங்காளம்மை.
மாரி = சாவு. காளி அழிப்புத் தெய்வமாகக் கருதப் பட்ட தால் மாரியெனப்பட்டாள், மடங்கலை அவளுக்கு ஊர்தியாகக் கொண்டதும் இக்கருத்துப்பற்றியே.
பீழை-பீடை+அரி =பீடாரி (மரூஉப்புணர்ச்சி). ஒரு நோ. பனை+அட்டு = பினாட்டு: அரித்தல் அழித்தல்.
துன்பத்திற்குக் காரணமானவளே அதை அழிப்பவளாக வுங் கருதப்பட்டாள்.
பீடாரி-பிடாரி, பிடாரி = அம் = பிடாரம்.
கன்னி என்றும் இளையோ ளாயிருப்பவள்; குமரி என்னும் பெயரும் இப்பொருட்டே.
கும் + அம் = குமம்-குமர் = திரட்சி, இளமை , கன்னிமை.
ம்-ர், போலி. ஒ. நோ. சமம் - சமர்:
"குமரிருக்குஞ் சசிபோல்வாள்" (குற்றா தருமசாமி. 47)
கும்- குமி - குவி. குவிவு-குவவு = திரட்சி,
குமர்+அன் = குமரன், குமர்+இ= குமரி.
குமரன் = திரண்டவன், இளைஞன், முருகன்.
குமரி- திரண்டவள், இளையள், கன்னி, காளி, ஓ, நோ. இளவட்டம் = இளைஞன். வட்டம் = உருட்சி.
E. vergin, from Gr. orago, to swell.
கும்மை - கொம்மை - திரட்சி, ஓ. நோ. குட்டு - கொட்டு.
குமரன் - குமாரன்(வ.) குமரி-குமாரி(வ.) - குமாரத்தி:
பகவதி பகவன் என்பதின் பெண்பால்) கன்னி என்னும் பெயர்கள் பின்னர்க் கூறப்படும்;