பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழகத்தின் தொன்மைக் குறிப்புக்கள்

௨௦௫


கானி கூளி (பேய்) களின் தலைவி, பேயைக் கருப் பென்றும் இருளென்றும் கூறுவது உலக வழக்கு.

அம் + காளம் (அல்லது காளி) + அம்மை அங்காளம்மை.

மாரி = சாவு. காளி அழிப்புத் தெய்வமாகக் கருதப் பட்ட தால் மாரியெனப்பட்டாள், மடங்கலை அவளுக்கு ஊர்தியாகக் கொண்டதும் இக்கருத்துப்பற்றியே.

பீழை-பீடை+அரி =பீடாரி (மரூஉப்புணர்ச்சி). ஒரு நோ. பனை+அட்டு = பினாட்டு: அரித்தல் அழித்தல்.

துன்பத்திற்குக் காரணமானவளே அதை அழிப்பவளாக வுங் கருதப்பட்டாள்.

பீடாரி-பிடாரி, பிடாரி = அம் = பிடாரம்.

கன்னி என்றும் இளையோ ளாயிருப்பவள்; குமரி என்னும் பெயரும் இப்பொருட்டே.

கும் + அம் = குமம்-குமர் = திரட்சி, இளமை , கன்னிமை.

ம்-ர், போலி. ஒ. நோ. சமம் - சமர்:

"குமரிருக்குஞ் சசிபோல்வாள்" (குற்றா தருமசாமி. 47)

கும்- குமி - குவி. குவிவு-குவவு = திரட்சி,

குமர்+அன் = குமரன், குமர்+இ= குமரி.

குமரன் = திரண்டவன், இளைஞன், முருகன்.

குமரி- திரண்டவள், இளையள், கன்னி, காளி, ஓ, நோ. இளவட்டம் = இளைஞன். வட்டம் = உருட்சி.

E. vergin, from Gr. orago, to swell.

கும்மை - கொம்மை - திரட்சி, ஓ. நோ. குட்டு - கொட்டு.

குமரன் - குமாரன்(வ.) குமரி-குமாரி(வ.) - குமாரத்தி:

பகவதி பகவன் என்பதின் பெண்பால்) கன்னி என்னும் பெயர்கள் பின்னர்க் கூறப்படும்;