௨௦௬
ஒப்பியன் மொழி நூல்
"வளிதருஞ் செல்வனை வாழ்த்தவு மியைவதோ" (கலி. 15) என்பதால், சூரியனும் பாலைநிலத்தில் வணங்கப்பட்டமை
அறியப்படும். ‘சுடரோடிரத்தல்’ என்னும் கோவைத் துறையும் இதை யுணர்த்தும்.
இனி, ஐந்திணைக்கும் பொதுவான சில வழிபாடுகளுமுள. அவையாவன :—
(1) தீவணக்கம்.
மலையில் மூங்கில்கள் ஒன்றோடொன்று தேய்வதனாலும், சக்கிமுக்கிக்கற்களை ஒன்றோடொன்று தேய்ப்பதனாலும் தீ உண்டாகிறது. தீக்கடை கோலால் நெருப்புண்டாக்கும் வழியை மூங்கிலுரசித் தீப்பற்றுவதிலிருந்து, அல்லது கல்லைச் செதுக்கும் போது தீப்பொறி தோன்றுவதிலிருந்தே. முதன் மாந்தர் கண்டுபிடித்திருக்க வேண்டும்.
பொருள்கள் தேய்வதால் உண்டாகும் நெருப்பு, தேய் எனப்பட்டது. தேய்-தேயு (வ.)
தேய்—தே—தீ. ஓ. நோ. தேன்—தே (த்தட்டு)— தீ(ம் பால்). தே+உ = தேய்வு—தேவ.. தேய்வு-தெய்வு. தெய்வு +அம் =தெய்வம். தேவு+ அன் =தேவன்.
மாந்தனால் முதன்முதல் வணங்கப்பட்டது தீயாதலால், அதன் பெயர்கள் பிற்காலத் தெய்வங்கட்கெல்லாம் பொதுப் பெயராயின. தீ வணக்கமும் பேய் வணக்கமும் சேர்ந்தே , சேயோன் வணக்கம் முதன் முதல் தோன்றிற்று.
தெய்வம், தேவு, தேவன் :
Sans, deva : L. deus, Cr. theos, god :
.
திவ், திவ்ய என்பவை தேவு என்பதன் திரிபேயாதலால், திவ் என்பதைத் தெய்வப் பெயர்க்கு மூலமாகக் காட்டுவது தவறாகும். இங்ஙனம் முதன் முதற் காட்டியது வடமொழியாரியர், வடமொழிக்குப் பிறமொழியை மூலமாகக் காட்டக் கூடாதென்பதே அவர் நோக்கம். ஆகையால், அவர் கூற்றைப் பின்பற்றுவோரெல்லாம், ஒப்பியன் மொழி நாலியல்பைச் செவ்வையா யுணரார். வடமொழி வழக்கற்ற