பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உகசு ஒப்பியன் மொழிநூல்

________________


திருமாலியராய்த் தெரிகின்ற தொல்காப்பியர் காலத்திலிருந்து திருமால் தனித் தெய்வமாகப் பிரித்துக் கூறப்பட்டு, அதிலிருந்து திருமாலியமே சிறந்து வருகின்றது என்பதற்குச் சான்றுகள் :

(1) தொல்காப்பியம் :

i. 'மாயோன் மேய' என்ற நூற்பாவில் மாயோனை முற்கூறுதல்.
ii. மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பிற்
றாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும்

என்று மன்னர்க்குத் திருமாலை உவமை கூறல். (2) திருக்குறள்.

i. 14 தாமரைக் கண்ணான்" என்றும். அடியளந் தான் தா அயதெல்லா மொருங்கு என்றும், திருமாலை விதப்பாய்ச் சுட்டல்:

ii. " தேவிற்றிருமால் என்று கவிசாகரப் பெருந் தேவனார் கூறல் (திருவள்ளுவ வெண்பாமாலை).

(3) சிலப்பதிகாரம் : திருமாலைப்பற்றிய பகுதிகளை மிகச் சிறப்பாய்க் கூறல், (4) தமிழ் தெடுங்கணக்கு அரி ஓம் நம என்று தொடங் கியதால் ஆரிவரியெனப்படுதல்,

(5) இதுபோது சில சைவரும் இராமம் நாமம் அணிதல்.

சிவன் திருமால் என்னும் தமிழத் தெய்வங்களோடு, முறையே ருத்திரன் விஷ்ணு என்னும் ஆரிய தெய்வங்களை இணைத்து விட்டனர் ஆரியர். ஆரியர்க்கு ருத்திரன் புயற் காற்றுத் தெய்வமும் விஷ்ணு சூரியத் தெய்வமுமாகும்,

காளிக்குச் சிறந்த இருப்பிடம் சுடலையாதலானும், பேய் கட்குத் துணங்கைக் கூத்து உரிய தாதலானும், காளியின் கணவனான சிவ பெருமான் சுடலையாடி யெனப்பட்டார்.

சிவபெருமானுடைய முத்தொழிலையே திருக்கூத்தாக உருவகித்தனர் உயர்ந்தோர்.