பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழகத்தின் தொன்மைக் குறிப்புக்கள்


சைவம்* பற்றிய சில தமிழ்க் குறியீட்டுப் பொருள்கள்

ஆனைந்து (பஞ்ச கவ்யம்) :

ஆனைத்தை (துடிசைகிழார் அ. சிதம்பரனார் செந்தமிழ்ச் செல்வியிற் கூறுகிறபடி) பால் தயிர் வெண்ணெய் மோர் நெய் என்று கொள்ளுவதே பொருத்தமாயிருக்கிறது. ஆனைத்தைப் பஞ்ச கவ்யம் என்று மொழிபெயர்த்துக் கூறினதுடன், பால், தயிர், நெய், கோமூத்திரம் சாணம் என்று பிறழக் கறி விட்டனர் ஆரியர்.

திருநீறு :

சிவபெருமான் தம்மை யடைந்தவரின் தீவினையை எரித்து விடுகிறார் என்னுங் கருத்துப்பற்றியதே, திருநீற்றுப் பூச்சாகத் தெரிகின்றது. நீறு = சுண்ணம், பொடி: பூதி யென்பது நீற்றின் மறுபெயர். பூழ்தி (புழுதி) - பூதி. ஒ. நோ. போழ்து (பொழுது)-போது. பூ =பொடி, தூள். பூதியை 'வி' என்னும் முன்னொட்டுச் சேர்த்து, விபூதியென்று வடசொல்லாக்கினர்.

உருத்திராக்கம் :

உருத்திர+ அக்கம் = உருத்திராக்கம்.

உருத்திரன் என்று சிவபெருமானுக்கொரு பெயர் தமிழிலேயே யிருந்தது. உருத்தல் = சினத்தல், தோன்றுதல். உரும்=நெருப்பு, சினம், இடி. உருமி=புமுங்கு. உருமம்= உச்சிவேளை. உருப்பக அழல் (புறம். 25). உரு என்ற சொல் முதலாவது நெருப்பையும் பின்பு சிவத்தையுங் குறித்தது. ஓ. நோ, அழல் - இழலுதல் =சினத்தல், கனல் -கனலுதல் = சினத்தல், சினம் நெருப்பின் தன்மையுடையது. சினம்....... சுடும் (குறள். 306). நெருப்பின் தன்மை ஒளியா தலாலும், ஒளியால் பொருள்களின் வடிவந் தோன்றுதலாலும், உரு என்னும் சொல் வடிவம் குறித்தது. சுவையொளி என்னுங் குறளில், காட்சியை அல்லது வடிவத்தை ஒளியென்றது காண்க.


  • சிவநெறியைச் சைவம் என்றது திரிபாகுபெயர் (தத்தி தாந்தம்). இவ்வியல்பு தமிழுக்குஞ் சிறுபான்மை யுண்டென்பதைப் பைத்தியம் என்னுஞ் சொல்லானுணர்க பித்து (gall - bladder)பித்தம் (Bile)-- பைத்தியம் (insanity),