பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழகத்தின் தொன்மைக் குறிப்புக்கள்

௨௩௫

சேரநாடு முதலாவது குடமலைக்குக் கிழக்கில் நிறுவப்பட்டுத் திருச்சிராப்பள்ளிக் கோட்டகையைச் சேர்ந்த கரூர் அதன் தலைநகரானதாகவும், பின்பு சேரன் குட மலைக்கு மேற்கிலுள்ள பகுதியைக் கைப்பற்றி நீர் வாணிகத்திற்கும் சோழ பாண்டியரினின்றும் பாதுகாப்பிற்கும் மேல்கரையில் வஞ்சி நகரையமைத்துக் கரூர் என்றும் அதற்குப் பெயரிட்டதாகவும், பிற்காலத்தில் கீழ்ப்பகுதியைக் காத்துக் கொள்ள முடியாமை யால், அது கொங்கு நாடென்று தனி நாடாய்ப் பிரிந்தபின் பழங் கரூர் கைவிடப்பட்டதாகவுந் தெரிகின்றது.

வினையெச்சமே பண்டைத் தமிழில் வினைமுற்றாக வழங்கிற்று:

மலையாளத்தில் இன்றும் அங்ஙனமே. இது சேரன் மேல்பாகத்தைக் கைப்பற்று முன்னிருந்த பழந்தமிழ் நிலையைக் குறிக்கும். சோர் செந்தமிழை வளர்த்தனர்; ஆயினும் அது எழுத்து வழக்கிலேயே சிறப்பாயிருந்திருக்கின்றது. பேச்சு வழக்கில் கற்றோரிடம் வினைமுற்று வடிவும் மற்றோரிடம் வினையெச்ச வடிவுமாக இருவகை வடிவுகளும் வழங்கியிருக்கவேண்டும். பிற்காலத்தில் செந்தமிழ்ச் சேர மரபின்மையாலும், தமிழொடு தொடர்பின்மையாலும், ஆரிய முயற்சியாலும், பண்படுத்தப்பட்ட செந்தமிழ் வழக்கற்று, பழைய வினையெச்ச வடிவமே வழங்கிவருகின்றதென்க: ஆயினும், 'வான்' 'பான்' ஈற்று வினையெச்சங்கள் இன்றும் வழங்குவதால், சேர நாட்டிற் செந்தமிழ் வழங்கியதை யுணரலாம்.

கிழக்கு மேற்கு என்னும் திசைப்பெயர்கள், குமரி நாட்டிலேயே அல்லது சேர ஆட்சியேற்பட்டபின் மலையாள நாட்டார்க்குள் தோன்றியிருக்க வேண்டும்.

(2) குமரி நாட்டில் ஒரு பகுதியின் பெயரான கொல்லம் என்பது, மலையாள நாட்டில் ஓர் இடத்திற்கிடப்பட்டமை.

(3) திரிந, மகிழ்நன், பழுதி முதலிய மெலித்தல் வடிவங்கள் செந்தமிழில் வழங்குதல்.

இவை குமரி நாட்டிலேயே தோன்றின குமரி மலை நாட்டு வழக்காகும்.

(4) உரி (அரைப்படி), துவாத்து (தோர்த்து) முதலிய திருநெல்வேலிச் சொற்கள் மலையாள நாடு நெடுக வழங்கல்,