௨௩௬
ஒப்பியன் மொழி நூல்
(5) பாணர் என்னும் பழந்தமிழ்க்குலம் மலையாள நாட்டிலிருத்தல்.
(6) மலையாள நாட்டில் மாதங்கட்கு ஓரைப் பெயர் வழங்கல்
இதுவே பண்டைத் தமிழ்முறை; தமிழ் நாட்டில் இது மாற்றப்பட்டது. திராவிடத்திற்குச் சிறந்த தமிழ் நாட்டையே முதன் முதல் ஆரிய மயமாக்கினர். இது ஒரு வலக்காரம்: தமிழ் நாடு ஆரிய மயமாயின், பிற திராவிட நாடுகள் தாமேயாகுமென்பது ஆரியர் கருத்து.
(7) பண்டைத் தமிழ் அவிநயங்கள் கதகளி என்னும் பெயரால் மலையாள நாட்டில் வழங்குதல்,
(8) தம்பிராட்டி, சிறுக்கள் (சக்கன்) முதலிய செந்தமிழ்ச் சொற்கள் மலையாள நாட்டில் வழங்கல்.
(9) மருமக்கட்டாயம் போன்ற ஒரு வழக்கு கருநீசியத் தீவுகளில் வழங்கல்.[1]
ஒரு விதப்பான மன்பதைய (Social) வழக்கு தென் கண்டத்திற்கு வடகிழக்கிலுள்ள தீவுகளிலும் மலையாள நாட்டிலும் வழங்குவதாயிருந்தால், இவ்விரு நிலப்பகுதிகளும் ஒரு காலத்தில் ஒன்றா யிணைக்கப்பட்டிருந்திருத்தல் வேண்டுமென்பதைத் தவிர வேறென்ன அறியக் கூடும்? குமரி நாட்டிலும் பெண் வழிச்செல்லமரபு வழங்கியிருக்கவேண்டும், தாய் + அம் = தாயம், தாயினின்றும் பெறும் உரிமை தாயம்.
பட்டம் விடுதல் சேவற்போர் முதலிய பொழுது போக்குக்கள், தென்னாட்டிலும் கீழ்நாடுகளிலும் இன்றும் ஒரே படியாயிருக்கின்றன;
கீழ் நாடுகளிலுள்ள வீடுகள் கோயில்கள் முதலிய கட்டடங்களின் அமைப்பும், வேலைப்பாடும், பெரும்பாலும் தமிழ்நாட்டில் அல்லது மலையாள நாட்டில் உள்ளவை போன்றே யிருக்கின்றன
கடாரம் ஜப்பான் முதலிய நாடுகளில், எரிமலை நில நடுக்கம் வெள்ளம் முதலியன பற்றி, அடிக்கடி வீடுகளும் ஊர்களும் இடம் பெயர்த்து கொண்டேயிருக்கின்றன. குமரி நாட்டி
- ↑ 1.Peeps at Many Lands - The South Seas, pp. 64—66.