பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உ.4 ஒப்பியன் மொழிநூல் வள்--வாளம்-வாளி: வாளம் - வாணம்-பாண (வ). வாளம் = வளைத்தது, வளைந்த மதில். ஓ. தோ. சக்கர வாளம். Lat. vallum a rampart; Ger, wall ; A. S. Weall; E. wall. வாளம்---பாளம்(மதில் போன்ற கனத்த தகடு): வாளம் --வாள் (வளைந்த கத்தி) அரிவாளையும் வெட்டறுவாளையுங் காண்க. வள்-வணர் - வணங்கு. வள் -uri (Sans), verto (L) வள்-வரி-- வரை. வரி+சை- வரிசை, வரி+ அம்= வரம்: வரி + அணம் - வரணம் - வண்ண ம் வரணம்--வரணி-வண்ணி , வண்ணம்+ஆன் = வண்ணான். இவற்றுள் பல சொற்கள் தனித்தனி பற்பல பொருள் களைக் குறிப்பன. அவற்றையும், வள் என்னும் வேரடியாய்ப் பிறந்த பிறசொற்களையும், எனது செந்தமிழ்ச் சொல்லியலக ராதியிற்றான் காணமுடியும், தமிழ்மொழி வளர்ச்சி தமிழ்மக்கள் குறிஞ்சிய விருந்தபோது சில சொற்களே தோன்றின. பின்பு முல்லை முதலிய ஏனைத்தினைகளுக்குச் சென்ற போது, ஒவ்வொன்றிலும் சிற்சில புதுச்சொற்கள் தோன்றின. அவற்றுள் மருதத்தில் தோன்றினவை பல வாகும். மருதத்திலும் நகரந் தோன்றிய பின்னரே பல சொற்கள் தோன்றின. பல தொழிலும் பல கலையும் புவ நா ஓரம் தோன்றிய போது ஒவ்வொன்றிலும் பற்பல சொற்கள் தோன்றின. ஒவ்வொரு திணையிலும் பொருளும் தொழிலும் கருத்தும் வேறுபடுதலின், வெவ்வேது சொற்கள் பிறந்தன; ஒவ்வொரு தொழிலிலும் கலையிலும் நூலிலும் கருத்துக்கள் வேறுபடுதலின் வெவ்வேறு சொற்கள் பிறந்தன.