௨௮௨
ஒப்பியன் மொழி நூல்
கள் ஈறு இருதிணைக்கும் பொது, கா: மக்கள், மாக்கள், மரங்கள்
அர், அ, வை என்பவை இயல்பா வாசுவே தெரிகின்றன.
குருவார்— குருமார், வ—ம, போலி:
வேற்றுமை :
வேறு+மை=வேற்றுமை: பெயரின் இயல்பான எழுவாய்ப்பொருள், செய்பொருள் கருவிப்பொருள், முதலியவாக வேறுபடுவது வேற்றுமை.
எட்டு வேற்றுமைகளுள், 1 ஆம், 3 ஆம், 3 ஆம், 4 ஆம். 6 ஆம், 7 ஆம் வேற்றுமைகளே முந்தித் தோன்றியவை. இவற்றுள்ளும், 2 ஆம், 4 ஆம், 7ஆம் வேற்றுமைகளே மிக முந்தியவை என்று கொள்ள இடமுண்டு. முதல் வேற்றுமையிலிருந்து 8 ஆம் வேற்றுமை தோன்றினது. 8 ஆம் வேற்றுமையே இறுதியில் தோன்றினது, தொல்காப்பியர் காலத்தில், வீளியைச் சேராமல் வேற்றுமை யேழென்றும், அதனைச் சேர்த்து வேற்றுமை யெட்டென்றும் இருகொள்கைகள் நிலவின. தொல்காப்பியர்,
"வேற்றுமை தாமே ஏழென மொழிப"
“விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே"
என்று கூறிய பின்பு, வேற்றுமை யெட்டென்னுங் கொள்கை: நிலைத்து விட்டது.
எட்டு வேற்றுமைகளும் இப்போதமைந்துள்ள முறைக்குக் காரணத்தை, பின்வரும் வினாக்களாலும் சிற்றாலுமறியலாம்,
அழகன் (யார்? அல்லது) என்ன செய்தான்? எதைச் செய்தான்? எதனாற் செய்தான்? எதற்குச் செய்தான்? எதனின்று செய்தான்? அது இப்போது யாரது? யாரிடத்திலிருக்கிறது?
எட்டாம் வேற்றுமை இறுதியில் தோன்றினதினால், இறுதியில் வைக்கப்பட்டது. அது முன்னிலை எழுவாயே
2 ஆம் வேற்றுமையுருபு ஐ.