௨௧௮
ஒப்பியன் மொழிநூல்
இதையறியாது.
"அன்றி யின்றியென் வினையெஞ் சிகரம் தொடர் பினு ளுகர மாய்வரி னியல்பே"[1]
என்றார் பவணத்தியார். செய்யாது என்பது செய்யா என ஈறு கெட்டும் வரும்.
பெயரெச்சம் :
செய்யாது (எதிர்மறை வினையெச்சம்) + அ (பலவின் பாலீறு) = செய்யாத (படர்க்கைப் பலவின் பால் எதிர்மறைக் குறிப்பு வினைமுற்று).
படர்க்கைப் பலவின்பால் வினைமுற்றே பெயரெச்சமாகுமென்று முன்னர்க் காட்டப்பட்டதை நினைக்சு.
செய்யாத என்பது செய்யா என ஈறுகெட்டும் வரும்.
தொழிற்பெயர் : |
செய்யாத (பெயரெச்சம்)+மை (தொழிற்பெயரீறு)= செய்யாதமை.
செய்யா (ஈறுகெட்டது)+ மை = செய்யாமை.
செய்யாத + அது = செய்யாதது.
வினையாலணையும் பெயர் :
செய்யாத + அவன் = செய்யாதவன்—செய்யாதான்.
குறிப்பு வினை
முற்று :
குறிப்பு வினைமுற்று மூவகையது.
(1) பாலீறில்லாத பெயர். கா: அது மரம் ; அவன்யார்?
(2) பாலீறுள்ள பெயர். கா : கண்ணன், நல்லது,நல்ல.
- ↑ 1.நன்னூல்,178