பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக முதல் மொழிக் கொன்கை


தமிழே திராவிடத்தாய்

தமிழே திராவிடத்தாய் என்று, இம்மடலத்தின் இரண்டாம் பாகத்தில், வெள்ளிடைமலையாய் விளக்கப்படும்.

தெலுங்கு கிழக்கத்திய இத்தாலியன் ('Italian of the East') என்றால், தமிழ் கிழக்கிற்கு மட்டுமன்று, இவ்வுலகிற்கே இலத்தீன் (Latin of the Universe) ஆகும். தமிழிலக்கியம் திராவிட மொழிகட்கெல்வம் பொதுச்செல்வம். ஆயினும், ஆரியத்தால் மயங்கிய பிற திராவிட மொழிகள் தமிழ்த் தொடர்பை முற்றிலும் விட்டுவிட்டன. ஆனால், தென் சொல் கலவாமல் ஏனைத் திராவிட மொழிகளில் ஒன்றிலாயினும் ஒரு விரிவான சொற்றொடரும் அமைக்க முடியாது.

IV. உலக முதன்மொழிக் கொள்கை

1: மாந்தன் தோன்றியது குமரி நாடாயிருக்கலாம் என்பது. இதற்குச் சான்றுகளும் காரணங்களும் -

(1) குமரி நாட்டின் பழைமை. (2) ஹெக்கேல் ஸ்கிளேற்றர் முதலியோர் இலெமுரியா மாந்தன் தோன்றிய இடமாகக் கூறியிருத்தல். (3) குமரி நாட்டு மொழியின் தொன்மையும் முன்மை பும், (4) தென்னாட்டுப் பெருங்கடல்கோட் கதை உலக முழுதும் வழங்கல், {5) மக்கள் கிழக்கிலிருந்து வந்தார் என்று யூத சரித்திரங் கூறல்.* {6) தொன் மரபினரான மாந்தர் பெரும்பாலும் தென் ஞாலத்திலிருத்தல். (7) குமரி நாடிருந்த இடம் ஞாலத்தின் நடு மையமா விருத்தல், (8) குளிரினும் வெம்மையே மக்கட்கேற்றல்:


  • பழைய ஏற்பாடு முதற்புத்தகம், 11:1. - ஒ.நோ .--25