பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக முதன்மொழிக் கொள்கை


(V) உலக முழுதும் ஒரே மொழி வழங்கிற்றென்று ஆதி யாகமத்திற் கூறியிருத்தலும், எபிரேய மொழி உலக முதன் மொழியாதற் கேற்காமையும்.

(vi) எபிரேய மொழியில் பல தமிழ்ச் சொற்கள் சிதைந்து கிடத்தல்;

கா : ஆப் (அப்பன்). ஆம் (அம்மை ), நூன் (மீன்), வாவ் (வளைவு), மேம் (மேகம் = நீர்), பே (வாய்). மேகம் என்பது மேலேயுள்ள நீர் என்று பொருள்படும் தமிழ்ச்சொல்லே, மே (மேல்)+கம் (நீர்)- மேகம்:

ஆதாம் (மாந்தன்) என்னும் முதல் எபிரேயப்பெயர் ஆதோம் (சிவப்பு) என்பதின் திரிவாகச் சொல்லப்படுகிறது, ஆதோம் என்பது அரத்தம் (சிவப்பு) என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபாயிருக்கலாம்,

இந்நூலின் 4ஆம் மடலத்தில், எபிரேயம் எங்கனம் தமிழி னின்றும் திரித்ததென்பது விளக்கப்படும்: (vii) ஆதியாகமத் திற் படைப்பைப் பற்றிக் கூறுமிடத்தே, வாரம் என்னும் எழு நாளளவைக் கூறியிருத்தல்,

பகலும் இரவும் சேர்ந்த நாள் என்னும் அளவு முதலிலிருந்துள்ளது. ஆனால், எழுகோள்களைக் கண்டுபிடித்தபின் அவற்றின் பெயரால் உண்டான வாரம் என்னும் அளவு பிற் காலத்தது.

மோசே உலக சரித்திரமறிந்தவரல்லர். அவர் அக்காலத்து மக்களின் அறிவு நிலைக்கேற்றபடி, பழைமை முறையிற் படைப்பைப் பற்றிக் கூறினார். இயேசு பெருமான் தாமே திருவாய் மலர்ந்தருளினதே, கிறித்தவர் ஐயமின்றிக் கொள்ளத்தக்கது. கடவுள் நினைத்தவளவில் எல்லாவற்றையும் படைப்பவர்: அதற்கு வாய்ச்சொல்லும் ஏழு நாளும் வேண்டியதில்லை.

2. தமிழ் உலக முதற்பெருமொழியா யிருக்கலாமென்பது

இதற்குச் சான்றுகளும் காரணங்களும் :-

(1) தமிழ் நாட்டின் பழைமை.
(2) தமிழின் பழைமை.
(3) தமிழின் எனிய வொலிகள்.