பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பியன் மொழி நூல்


(14) சொற்றொடரில் தமிழ்ச்சொன் முறை இயல்பாயிருத்தல்.

பன்னிரண்டு என்னும் சொன் முறை பத்தோடு இரண்டு சேர்ந்தது என்பதைக் குறிப்பதாகும். வடமொழியில் த்வாதசம் என்னும் முறை இயற்கைக்கு மாறானதாகும்;

(15) தமிழ் உலக முதன்மொழி ஆய்வுக்கு நிற்றல்.

தமிழொடு பிறமொழிகள் ஒவ்வாமைக்குக் காரணங்கள்

(1) தமிழின் பல்வேறு நிலைகளில் மக்கள் பிரிந்து போனமை.

தமிழ் குறிப்பொலி நிலையிலிருந்தபோதும், அசை நிலையிலிருந்தபோதும், புணர்நிலையிலிருந்தபோதும், பகுசொன்னிலையிலிருந்தபோதும், தொகுநிலையிலிருந்தபோதுமாகப் பற்பல சமயங்களில், குமரிநாட்டினின்றும் மக்கள் கிழக்கும் மேற்கும் வடக்குமாகப் பிரித்து போ யிருக்கின்றனர்.

(2) குறிப்பொலி நிலையிலும் அசைநிலையிலும் பிரிந்த மாந்தர் அவற்றை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு சொற்களை அமைத்துக்கொண்டமை :

(3) பிரிந்துபோன மக்கள் மூலச்சொற்களை மறந்து , விட்டுப் புதுச்சொற்களை ஆக்கிக்கொண்டமை.

(4) தட்பவெப்ப நிலை உணவு முதலியவற்றால் உறுப்புத் திரிந்து, அதனால் உச்சரிப்புத் திரிந்தமை.

கா : தோகை -Pers: tawns, Gr: taos, L. pavo, A: S: pawe, E; pea--peacock. சே-சேவு-(சேக்கு )-A. S. coc, E. cock; ஓ. நோ: நா-நாவு- நாக்கு.

(5) பெரும்பாற் சொற்கள் போலி மரூஉ. சிதைவு . முதலிய முறைகளில் திரிந்தமை;

(6) மூலமொழியிலில்லாதவொலிகள் தோன்றினமை:

(7) மூலமொழி இலக்கணத்தினின்றும் வேறுபட்ட,இலக்கணம் எழுதப்பெற்றமை.

(8) பெரியோரை மதித்தல் காரணமாகச் சொற்களை மாற்றல்: