பக்கம்:ஒய்யாரி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒய்யாரி 靈藝 'ஊஹடும்.ஊஹவிங் ... ஊம்ஹாடுங் என்று தன் வசைத்தாள் ஒய்யாரி. அவள் கழுத்து அசைவுக் கேற்ப ஊசலிட்ட லோலக்குகள் வ ரு டு ம் கன்னங்களும், இன்னும் கண்களும் அவனுக்கு போதையூட்டின. அவனே விழுங்க விரும்புகிறவன் போல் ஆசையாகக் கவனித்திருந்தான். 'உனக்கு என்னத்துக்கு அந்தச் சிரமம்? பணத்தை என்னிடமே கொடுத்து விடேன்' என்று கை நீட்டினுள் மங்கை. பணம் என்றதும் அவனுக்குத் திகைப்பு ஏற்பட்டது. அவனுக்கு யோசிக்க நேரம் கொடாமலே அவள் என்ன யோசனை ராஜா கிட்டேப் பணமில்லையோ! வெறும் இஸ்பேட் ராஜா தானே நீ என்று கிண்டல் செய்து அவன் கன்னத்தை லேசாக விரலால் தட்டினுள். அவன் வலையில் விழுந்தான். பையிலிருந்த ஐந்து ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தான். அவள் புன்னகையோடு வாங்கிக் கொண்டு, தன் கையால் அவன் முகத்தை வருடி காடியைப் பிடித்து அன்போடு லேசாக ஆட்டி முகத்தை அசைத்துச் சிசித் தாள், அவ்வேளையில் அவன் இந்த உலகத்திலேயே இல்லை! இதற்குப் பிறகு அடிக்கடி இன்ப ஸ்பரிசம் அவனுக் குக் கிடைத்தது. அவள் முன் போல் விலகி இருப்பது மில்லை. அவர்களுக் கிடையே கிடந்த துாரம் குறுகிக் குறைந்தே வந்தது, முன்பு அவனும் அவளும் எதிர் எதிராக தனித்தனி நாற்காலிகளில் உட்காருவது வழக் கம். மூன்று நான்கு சக்திப்புகளுக்குப் பிறகு இரு வருக்கும் பெரிய நாற்காலி ஒன்றே இடமளித்தது. அதிலும் மூலக்கு ஒருவராக இருந்தவர்கள் பக்கத்தில் பக்கத்திலேயே கெருங்கி வந்தனர். அவளது அன்பு வளர வளர அவனிடமிருந்து பணம் தாராளமாகவே அவள் பக்கம் பறந்து வந்தது. அவன் வரும்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/21&oldid=762475" இலிருந்து மீள்விக்கப்பட்டது