பக்கம்:ஒரு படவுக்காரி கதை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

கொண்டு புறப்பட்டாள். கொஞ்ச நேரம் அங்குமிங்குமாக அலைந்து திரிந்துவருகையில், மேகங்கரு த்துக்கொண்டு காற்றும் புசலும் அடித்து இடி முழங்குகிறது போலிருந்ததினால், அந்த இராத்திரித்தங்கும்படியாக ஒரு கோவிலுக்குள் புகுந்தாள். இந்தக்கோவில் ஐஞ் நூறு தேவாதிகள் கோவில். இதில் இருட்டடைந்த ஓர் மூலையில் போய்ப் பதுங்கினாள். அங்கே ஒரு ஆள்பருமமுள்ள விகாரமான அந்தங் கெட்ட விக்கிரகங்கள் அநேகமாயிருந்து, இருட்டினபிறகு இடிமுழக்கங் கோவிலைக் கிடுகிடென்று அதிரப்பண்ண, பளிச்சென்று மின்னுகிற மின் வெட்டு