பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79


மணமும், அரிய சுவையும் தன்னுள்ளிருப்பது அவர்களுக்கே கூடப் புரியத் துவங்கும்.

அப்படி ஒடு உடைந்த அல்லது உடைக்கப்பட்ட மூர்த்சி யின் ஹாஸ்டல் வரலாற்று சம்பவத்திலிருந்து நீங்கள் அறிந்திராத - அறிந்து கொள்ள வேண்டிய அதிசய நிகழ்ச்சியை மட்டும் நான் இப்போது உங்களுக்குக் கூறு கிறேன்? மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என்பதாலேயே!

'அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்பது சரியான பழமொழியல்ல என்பது என் கருத்து. அணைக்கவே தெரி யாத பல கைகள் அடிப்பதைப் பார்க்கிருேம். அடிக்கிற கைக்கு அணைக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் அந்தக் கை தன்னுடைய உரிமையைச் சரியாகப் பயன்படுத்தியதாகும்.

ஆளுல் அனேக்கவே தெரியாத-அல்லது பாரபட்சமின்றி யாருடனும் அனுசரித்தோ பணிந்தோ போகவே தெரியாத மூர்த்தியைப் போன்றவர்கள் கையைக் கட்டிக் கொண் டிருக்கிறவரையில்தான் கெளரவம். அதைவிட்டு சர்வர் சுப்பையாவை அடித்ததோடும் நில்லாமல் மேலும் மேலும் தவறுகளைச் செய்துவிட்டு, விசாரணை வேண்டும் விசாரணை வேண்டும்’ என்று ஓயாமல் கூச்சல் போட்டான்.

அந்த மூர்த்தி இப்போது எங்கே?

திருடியதாகக் கூறப்பட்டுள்ள பாபு இதோ என் பக்கத் தில் உட்கார்ந்திருக்கிருன்: ஆனால் அவன் திருட்டை உங்க ளுக்கெதிரில் அம்பலப்படுத்தப் போவதாகக்கூறிய-குற்றஞ் சாட்டிய மூர்த்தியால் பாபுவைப்போல் ன் பக்கத்தில் அமரவோ அல்லது நிற்கவோ கூட முடியவேண்டாம்; கூட்