பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81


இத்தனை செய்தும் மூர்த்தி வெற்றி பெற்ருளு என்ருல் அதுதான் இல்லை: மூர்த்தியால் மட்டுமல்ல சத்தியத்தை வெல்ல யாராலும் முடியாது.

அதனாலேயே, மெய்யும் பொய்யும் கைகலக்கட்டும். பகிரங்கமாகக் கை கலந்து போர் புரியின் என்றேனும் மெய் தோல்வி யடைந்ததைக் கண்டவர் உளரோ?என்று மேதை மில்டன் வினவிஞன்.

எலக்ஷன் விவகாரத்தினல் பிரிந்து போனுலும் ஆதியில் பாபுவும் மூர்த்தியும் நெருங்சிப் பழகிக் கொண்டிருந்த இ ைபிரியாத நண்பர்களாகயிருந்தது உங்களுக்கு நினை விருக்கும். அதல்ை பாபுவின் வீட்டு நிலவரம் மூர்த்திக்கு நன்கு புரியும்.

அவுட் ஹவுஸ் என்கிற பெயரில் பாபுவின் வீட்டின் முன் ஒரு அறை இருந்தது. அதை யாரும் உபயோகிப்பது இல்லை. தேவையற்ற சாமான்களை அதில் போட்டு வைத்திருந் தார்கள். பல வருஷங்களாக அது பூட்டப்பட்டுக் கிடந்தது.

யாருமறியாமல் ஹாஸ்டலில் இருந்து மூர்த்தி, தான் திருடிக் கொண்டு வந்த பொருட்களை நள்ளிரவில் அந்த அறையின் ஜன்னல் வழியாக உள்ளே போட்டுவிட்டான்.

இதைப் பற்றி பாபுவுக்கு ஒன்றுமே தெரியாது. அந்த தைரியத்தில்தான் பாபுவின் வீட்டை சோதனை போடக் கூட என்னை அழைத்துச் சென்ருன், ஆளுல் விதி மூர்த்தியை சதி செய்து விட்டது.

பாபுவின் வீட்டிற்கு திடீரென்று ஒரு நாள் காசிக்குப் போற பாட்டி வந்து இறங்கிள்ை. மிகுந்த ஆசாரமுள்ள அவளுக்காக பாபுவின் அம்மா அவுட் ஹவுசை ஏற்பாடு