பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84


வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்த வேலைக் காரி பானைக்கடியில் பதுக்கி வைத்திருந்த பையைக் காணு மல் பதறிப் போளுள். தன் புருஷ னின் குணம் தெரிந்த அவள் மறு நிமிஷம் மார்வாடி கடைக்கு ஒடோடியும் வந்தி ருக்கிருள். அவளேயும் மார்வாடி மிரட்டி அங்கேயே உட் கார வைத்திருந்தான்.

மார்வாடி கடைக்குள் நாங்கள் துழைந்ததும் மேஜை மீது வைத்திருக்கும் சாமான் பையையும் பாபு வீட்டு வேலைக்காரியையும் பார்த்துவிட்டு மூர்த்தி அப்படியே மூர்ச்சையாகி விட்டான்.

இந்தக் காட்சியையும் எங்களையும் பாபுவையும் பார்த்து விஷயம் வெட்ட வெளிச்சமாகி விட்டதென்று அறிந்த வேலைக்காரி கோ வென்று அழுதாள். குற்றத்தை ஒப்புக் கொண்டு தயவு செய்து போலீசுக்கு சொல்லிப் பிடா தீங்க’ என்று என் காலைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சி அழுதாள்.

மயக்கம் தெளிவிக்கப்பட்ட மூர்த்தி இந்தக் காட்சியைப் பார்த்துத் தலேயைத் தாழ்த்திக் கொண்டான். நான் அவனி டம் 'உன்னுடைய இந்தச் செயலுக்கு மூன்று பேர் போலிஸ் ஸ்டேஷனுக்குப் போயாக வேண்டும். என்ன சொல்லு கிருய்’ என்று அதட்டினேன். அவனுடைய கண்களிலிருந்து கண்ணிர் மாலை மாலையாக வழிந்தோடியது.

அந்தக் கண்ணிர்த் திரையினுாடேயே பாபுவைப் பரிதாப மாகப் பார்த்தான் மூர்த்தி. தன்னுடைய செய்கைக்காக அவன் வருந்தி பாபுவிடம் மானசீகமாக மன்னிப்பு வேண்டு வது போல் இருந்தது அந்த உருக்கமான காட்சி. நானும் பாபுவைக் கவனித்தேன். அவனது கண்களும் கலங்கிப்போய் தளும்பிக்கொண்டிருந்தன.