இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
0 ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும் 127
மிதமிஞ்சிப் போயிருந்தாலோ அல்லது பின்னடைவு ஆனாலோ ஆட்டம் ஆடிப் போயிருக்கும்... குழு உணர்வை மேன்மையாக வெளிப்படுத்துவதும் ஒரு கலையே... அதோடு இவர்களும் கலை வெளிப்பாட்டில் சோடை போகவில்லை... ஆகையால் இவர்களே வெற்றி பெற்றதாக இப்போதும் அறிவிக்கிறேன்... நடுவர் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவனை வீரனாக்க, ஒன்பதுபேரை பேடியாக்கும் கலை, நமக்குத் தேவை இல்லை..."
அர்ச்சுனனையும், ஏகலை
வனையும் மனதிற்குள் ஒப்பிட்டு, புதிய சிந்தனைக்கு தளம் கொடுத்த கூட்டம், இப்போது அமைதிப்பட்டதுபோல் தோன்றியது...
-மகளிர் சிந்தனை-ஜனவரி 1996