பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174 சு.சமுத்திரம் 0


செம்மல்...!"

அந்தம்மாவுக்கு, இந்த மாதிரி புகழ் பாடுவதில் தன்னிகரற்ற ஒரு சமையலாளி, மிஸ்டர் கீரை மணியைப் பொறாமையோடு பார்த்துவிட்டு, அன்னையின் அருகில் சென்று வாய் பொத்தி வர்ணித்தார்...

"எங்கள் இனத்தின் இனமே... குலத்தின் குலமே... மலைகளின் அரசர் இமயம்... நதிகளின் அரசி காவேரி.. மொழிகளின் அரசி தமிழ்... அரிசி ரகங்களின் அரசி ஜெ.ஜெ.92... இவை அத்தனைக்கும் சக்ரவர்த்தினி நீ...இந்த அணையாபெரு அடுப்பை ஏற்றிவைக்க வேண்டும் அம்மா... ஒன் கைபட்டு புனிதம் பெறுவதற்கு விறகு சுள்ளிகளுக்கு ஏது தகுதி... இதனால்தான், சந்தன மரங்களையே விறகாக வெட்டி வந்திருக்கேன் தாயே... அதோ வெள்ளி அடுப்பு... அதன் மேல் பொன் பானை... உன் தங்க கைகளால், பானையில் அரிசி போட்டு, அடுப்பில் நெருப்பூட்ட வேண்டும் ஆனந்த வல்லியே... அற்புத நாயகியே..."

அன்னை, அந்த அடைமொழிகளுக்கு ஏற்ப எழுந்தார். சமையல் திட்டைப் பார்த்து முகம் சுழித்தார்... அதட்டலாக

கேட்டார்.

"ஆஸிட் இருக்குதா..."

"தாயே... தரணியே... தப்பேதும் செய்திருந்தால் காலால் இடறம்மா... கையால் உதையம்மா... ஆனால் ...ஆனால்...”

அன்னை திருவாய் மலர்ந்தருளினார்...

'சமையல் கட்டு ஒரே அழுக்கு...ஒரே முடை நாத்தம்..முதலில் இதைக் கழுவ வேண்டும்..."