54 சு.சமுத்திரம்
எடுத்துக் கொண்ட காதலன் எகிறினான்.
"வேணுமுன்னா... கம்ளெயிண்ட் செய்யேய்யா... ஒன்னை மாதிரி எத்தன கம்ளெயின்ட்ட இவங்க முதலாளி பார்த்திருப்பாரு... போ... இப்பவே... போ...அதை விட்டுவிட்டு வயசுப் பொண்ணுகிட்டே ஏய்யா கலாட்டா செய்யுறே... கேட்பதற்கு ஆள் இல்லன்னு நெனச்சியா... சர்த்தான்... போய்யா..."
விவகாரம், விகாரமாவதைப் புரிந்து கொண்ட பழனிச்சாமி, வாயடைத்துப் போய் வெளியே வந்தார். வாயடைத்ததே தவிர, மனம் அடையவில்லை. இதை விடப்படாது... போலீஸ் கமிஷனர் ஆபீஸ் போயிட்டு, அப்படியே டெலிபோன் டிபார்ட்மெண்டுக்கும் போகணும்..."
பழனிச்சாமி, எதிரே வந்த ஆட்டோவில் ஏறினார். தடைக்கள ஓட்டம்போல் ஓடிய அந்த ஆட்டோ, போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு முன்னால் போய் நின்றது. மீட்டரை பார்த்துவிட்டு, பழனிச்சாமி பதறிப் பதறிக் கேட்டார்.
"என்னப்பா அநியாயம்... இருபது ரூபாய் கூட வராது... ஒன் மீட்டர் முப்பத்தஞ்சு ரூபாய் காட்டுது..."
"ஒன்ன மாதிரி ஆசாமிங்கள ஏத்துறதே தப்புய்யா... ஊருக்கு புட்சா..."
"அப்போ... நீயும் மீட்டர்ல சூடு வச்சிருக்கேன்னு சொல்லு"
"வச்சால் என்ன தப்பு... ஒன்ன மாதிரி ஆசாமிங்களுக்கு