பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



0 ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

61

அடிக்கடி வருவார்கள். ஒங்க பையனுக்கு வேலை கிடைத்ததா ஸார். பிழைக்கத் தெரியாதவர் ஸார் நீங்க’ என்பார்கள். உடனே பிழைக்கத் தெரிந்த அவர்களிடம், கடல்மணி, எஸ்.டி.டி. வசதி, கொண்ட டெலிபோனை நீட்டுவார்.. நிர்வாக அதிகாரி, பம்பாய் மைத்துணிக்கும், அஸிஸ்டெண்ட் மைனர், பெங்களுர் மாமா பெண்ணுக்கும் குடும்ப விஷயங்களை சொல்லும்போது சும்மா இருக்கும் கடல்மணி, அவர்கள் இன்றைக்கு என்ன குழம்பு.. என்ன பொறியல்' என்று கேட்கும்போது பேச வேண்டியதை மட்டும் பேசுங்க.. கத்தரிக்காய்..கருவாட்டு விவகாரத்தை பேசப்படாது.டெலிபோன்ல ஒவ்வொரு விநாடிக்கும் பணம் பாருங்க" என்பார். இப்போது அவர்களுக்கு, அவர், பேசவிட்டதை விட, பேச விடாததுதான் நினைவுக்கு வருகிறதோ என்னவோ.. அல்லது ஒருவேளை, இப்போது, இவரது அறை காலியாக இருப்பதால், நேர்முக உதவியாளப் பெண்ணை, உருட்டி, மிரட்டி, பம்பாய் மைத்துணியுடனும், பெங்களுர் மாமா பொண்ணுடனும் எஸ்.டி.டி. உறவுகளை அதிகமாய் வைத்துக் கொள்ள முடிகிறதோ.. என்னவோ..

கடல்மணியின் கரங்கள், அவரை அறியாமலே ஆயுதங்களாக ஆகிக் கொண்டிருந்தபோது, சீனிவாசன் கேட்டார்.

'என்ன அண்ணாச்சி இந்தப் பக்கம்..

'தெரியாதது மாதிரி கேட்கிறீங்களே. நீங்க எதுக்காக வந்திங்க.."

'நாங்களா..நாங்க..வந்து.'

ஏதோ சொல்லப் போன சீனிவாசனை, நிர்வாக அதிகாரியும், அஸிஸ்டெண்ட் ஆசாமியும் ஆளுக்கொரு