பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

79

போட்டான். அவர்களோ, அதில் சிக்கிக் கொள்ளாதவர்களாய், முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். 'அகராதிபிடிச்ச பய...இன்னும் மாட்டணும். இது பத்தாதுப்பா!' செல்லையா, மனைவியைக் கடைக்குள் கூட்டிக் கொண்டுபோய் விபரம் சொன்னான். உடனே அவள் ஆலோசனைப்படி ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்தான். அவள் ஒவ்வொரு வகைப் பொருளையும் எண்ணி எண்ணி இலக்கத்தைச் சொல்ல, அவன் குறித்துக் கொண்டான். ஒரு மணி நேரமாக பாதிப்பொருட்களை உருட்டிப் புரட்டி, எழுதிவிட்டார்கள். அவன் கை வலித்துப் போய் விரல்களை நீட்டி மடக்கியபோது... 'இந்தாப்பா ஒன் பேரு என்னப்பா...' 'நீங்க யாருங்க சார்..." 'யோவ் அறிவு கெட்டவனே... கேட்டதுக்கு பதில் சொல்லேன்யா...' சார், இது ஜனநாயக நாடு... ஒருத்தருக்கு ஒருத்தர் மரியாதை கொடுக்கிறதுதான்..." 'ஒகோ... நீ... சாரி... நீங்க அப்படி போறீங்களோ... நான் ஹெல்த் இன்ஸ்பெக்டர்... சுகாதார ஆய்வாளர்... ஒங்க வேர்க்கடலை மிட்டாய்ல ஏன் இப்படி ஈ மொய்க்குது..." 'அதுங்க ஜாடிக்குள்ளதான் இருக்குது ஸார். ஈக்கள் ஜாடிக்கு வெளியதான் மொய்க்குது..." "அப்போ அந்த ஜாடி அவ்வளவு அசுத்தமா இருக்குன்னு அர்த்தம்... வெளில இவ்வளவு அசுத்தம்னா, உள்ள எவ்வளவு