பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும் 91

கார்டுகளை சில பெண்களிடம் பெயரை மாற்றிக் கொடுத்துவிட்டு, நிதானமாக நடப்பதுபோல் பாவலா செய்தபடியே நடந்தான். கவுண்டருக்குள் இருந்த கிடாமீசை, சோதியையும், ராக்கம்மாவையும் ஒருச்சாய்த்துப் பார்த்தான். ராக்கம்மா வரிசையோடு வரிசையாக நகர்ந்தாள். திடுக்கிட்டு புடவையைப் பிடித்தாள். 'ஐயோ... நின்னு நின்னு கால் வலிச்ச கண்றாவியில 'இடுப்புச் சேல தொப்புளுக்குக் கீழப் போனத கூடப் பார்க்கலப்பாரு நானு...படிச்சப் பொம்மனாட்டிங்க கட்டிக்கறது மாதிரி புடவ கீழப் போகப்போச்சுது பாரு... பாவிப்பய இன்னாம்மா... பாக்கான் பாரு... "'யோவ்... தாத்தா... கிருஷ்ணாயில் கிடைக்கட்டும். உன் வாயில அரை லிட்டரை ஊத்தரன் பாரு... ஐய்யயோ... என்கி பின்னால எம்மாம் க்யூ... அது... எய்ந்து இன்னேரம் டீக்கி அலமோதுமே. நா இல்லாத சாக்குல சல்பேட்டாபூட்டாலும் பூடுமே...' ராக்கம்மா, எப்படியோ கவுண்டருக்கு அருகே வந்துவிட்டாள் வானத்திலிருந்த நிலாவைப் பறித்தது போன்ற ஒரு மகிழ்ச்சி. ஒரு நாள் வேலைக்கி போகாமல், வீட்டிலேயே இருந்தது போன்ற ஆனந்தம். 'அது','சாராயம் குடிக்காமல் வீட்டிற்குத் திரும்பியது போன்ற திருப்தி; பிளாஸ்டிக் கேனை எடுத்து கவுண்டரில் வைத்தாள். மூன்று 10 ரூபாய் நோட்டுக்களை எடுத்து கவுண்டருக்குள் கைவிட்டாள். கிடா மீசைக்காரன் கைகளை உதறியபடியே எழுந்தான். ஒருவேளை கால் வலிக்காக அங்கும் இங்குமாக உலாத்திவிட்டு அவன் வரலாமென்று ராக்கம்மா... சிறிது பேசாமல் நின்றாள். ஆனால், அவனோ அவளுக்கு முதுகை காட்டியபடி யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான்.